முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல சீன நடிகை மாயம் சிறையில் உள்ளதாக சந்தேகம்

சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்,சீனாவைச் சேர்ந்த பிரபல நடிகையை கடந்த 2 மாதமாக காணவில்லை. அவர் என்ன ஆனார், எங்கே போனார் என்பது தெரியவில்லை. ஆனால் அவரை சிறையில் அடைத்திருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வலுத்துள்ளது.

சீனாவின் பிரபலமான நடிகை பேன் பிங்பிங். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிக சம்பளம் வாங்கும் சீன நடிகையும் இவர்தான். 2014-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான எக்ஸ் மென், டேய்ஸ் ஆப் பியூச்சர் பாஸ்ட் படத்தில் பேன் நடித்துள்ளார்.

ஆனால் ஜூலை 1-ம் தேதி முதல் இவரை திடீரென காணவில்லை. என்ன ஆனார், எங்கே போனார் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. இவர் குறித்த எந்தத் தகவலும் இல்லை. இந்த நிலையில் இவர் மீது வரி ஏய்ப்பு புகார் கிளம்பியது. இந்த வழக்கில் இவரைக் கைது செய்து சிறையில் வைத்திருக்கலாம் என்று தற்போது சந்தேகம் வலுத்துள்ளது.

கடந்த வாரம்தான் சீன அரசின் பத்திரிகை ஒன்றில் பேன் அரசுக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். சட்ட ரீதியான முடிவுகளை அவர் ஏற்பார் என்று கூறி செய்தி வெளியிட்டது. இதனால் பேன் கைது செய்யப்பட்டிருக்கலாம என்ற சந்தேகம் வலுத்தது. பின்னர் அந்த செய்தியை இணையதளத்தில் எடுத்து விட்டனர்.

பேன் மீது ஏகப்பட்ட புகார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு தவிர பெருமளவில் பல்வேறு முறைகேடுகளில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் புகார் உள்ளது. இந்தப் புகார்களின் பேரிலேயே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.  அவரை வீட்டுக் காவலில் வைத்திருக்கலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது. இவர் மட்டுமல்லாமல் இவரது காதலரும், நடிகருமான லீ சென்-னையும் கூட காணவில்லை. அவரும் ஜூலை முதல் வாரத்திலிருந்தே ஆளைக் காணோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து