முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு:பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தனி மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளைப் பரிசீலனை செய்த சுப்ரீம் கோர்ட் இது தொடர்பாக புதிய மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கடந்த 1991- ம் ஆண்டு மே மாதம், ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற ஒரு தேர்தல் பேரணியில் கொல்லப்பட்டார். உடன் பொதுமக்கள் 14 பேரும் கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்த பரிந்துரை தமிழக அமைச்சரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் அது கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரைக்கு, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து, மாநில அரசாங்கத்தின் பரிந்துரைக்கு கவர்னர் ஒப்புதலை வழங்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் மனுவோடு இதனைப் பார்க்க முடியாது எனவும், ராஜீவ் படுகொலை சம்பவத்தில் உடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 7 பேர் விடுதலையை எதிர்க்கும் மனுவை தனியே தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து