முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு: டாக்டர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கேட்டு வரும் 21ம்தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவித்திருந்த டாக்டர்கள் அதனை ஒத்திவைத்துள்ளனர்.

கால அவகாசம்...தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கேட்டு வரும் 21ம் தேதி வேலைநிறுத்தம் அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து டாக்டர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சுகாதாரத்துறையின் பல்வேறு அதிகாரிகள் நேற்று காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் டாக்டர்களின் கோரிக்கையை 6 வாரங்களுக்குள் பரிசீலனை செய்து முடிவெடுப்பதாக அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் கடந்த 20-11-2017-ம் ஆண்டிலிருந்தே தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதாகவும் அரசுக்கு ஒரு வருடம் வரை வாய்ப்பு கொடுத்திருந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். எனினும் 4 வாரத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்குவதாகவும் அதுப்பற்றி அரசு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

பேச்சுவார்த்தை... அரசு தரப்பிலும் அதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டு எழுத்துமூலம் பதிலளிக்கப்பட்டது. மேலும் அதுகுறித்து கண்காணிக்க டாக்டர்கள் சங்கம் தரப்பில் அரசுடன் கண்காணிப்பு குழு அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசுக்கும் டாக்டர்களுக்குமான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் சங்கங்கள் தங்களது வேலைநிறுத்தத்தை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளன. டாக்டர்கள் தரப்பில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செந்தில், ரவிசங்கர் ஆகியோரும் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சுந்தரேசன், செயலாளர் சத்திய ராஜன் தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஞானபிரகாசம் மற்றும் செயலாளர் கதிர்வேலு ஆகியோரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து