முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள் நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ராகுல் காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்சு முன்னாள் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே அந்த நாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டி பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறிய போது,ரபேல் விவகாரத்தில் பிரான்சுவா ஹாலண்டே, பிரதமர் நரேந்திர மோடியை திருடர் என்று விமர்சித்துள்ளார். அவரது குற்றச்சாட்டை மோடி ஏற்றுக் கொள்கிறாரா, இல்லையா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ராகுலுக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-ஆட்சியில் இல்லாத விரக்தியில் ராகுலும், காங்கிரசும் அவ தூறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். பா.ஜ.க ஆட்சியில் ஊழல் இல்லை. அதே நேரம் ராகுல் காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து