முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே புரட்டாசி மாதத்தில் நடந்த குதிரை எடுப்பு திருவிழா

வியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

  நத்தம் -  திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் அருகே மூங்கில்பட்டியில் வீரன் பட்டாணி சுவாமி கோவில் திருவிழா நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வர்ண குதிரைகள் எடுப்பு விழா அதிவிமரிசையாக நடந்தது.இதையொட்டி ஊர் மந்தையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குதிரைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.. பின்பு நேர்த்திக்கடனுக்காக செய்யப்பட்ட குதிரை,மாடு, ஆடு,நாய் போன்ற சிலைகள் ஊர்வலமாக மூங்கில்பட்டியில்  உள்ள முக்கிய வீதிகள் வழியாக எடுத்துவரப்பட்டு பின்பு அனைத்து சிலைகளும் பெருமாள்மலை அடிவாரத்திற்கு வாணவேடிக்கைகளுடன் சுவாமி இருப்பிடம் போய் சேர்ந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மூங்கில்பட்டி கிராமமக்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து