முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். நாளை மதுரை வருகை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 2 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை, மதுரை மாநகர், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை 4-ம் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம் நாளை மதுரை வருகிறார்கள்.

பல்வேறு திட்டங்கள்

இது குறித்து ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

அம்மாவின் சாதனை திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சரித்திர சாதனை படைத்து வருகிறார். அவதூறுகளை அறுத்தெறிந்து விட்டு அம்மா காட்டிய வழியில் திட்டங்களை செயல்படுத்தி வரும் வேளையில் 34 ஆயிரம் தடைக்கற்களை சந்தித்து, எதிர்த்து அவற்றையெல்லாம் முறியடித்து தமிழக மக்களுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் பல்வேறு திட்டங்களை, சரித்திர சாதனை படைத்த திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிறார்கள்.

ஆலோசனைகளை வழங்கி...

மதுரை மாநகர், புறநகர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை 4-ம் தேதி வியாழக்கிழமை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஜடாஜக்டர் மகாலில் காலை 10.30 மணியளவில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசுகிறார்கள். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ, புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் செய்து வருகிறார்கள். இந்த கூட்டத்தில் 15 மூத்த அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர். கழக நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து முதல்வரும், துணை முதல்வரும் அறிவுரைகளை, வழிகாட்டுதல்களை வழங்கி பேசுகிறார்கள்.

சாதனை விளக்க கூட்டம்

இதனை தொடர்ந்து வரும் 11-ம் தேதி அம்மா அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடக்கிறது. இதில் அம்மாவின் சரித்திர சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்லூர் கே. ராஜூ, புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து