முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு இருமுடி கட்ட மாட்டோம் திண்டுக்கல் அய்யப்ப பக்தர்கள் முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,-  10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு இருமுடி கட்ட மாட்டோம் என்றும் பழமையான ஆச்சார வழிபாட்டு முறையை மாற்ற முடியாது என்றும் திண்டுக்கல் வட்டார அய்யப்ப பக்தர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல் மலையடிவாரம் அய்யப்ப பக்தர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் சங்க துணைத் தலைவர் வி.டி.ஆர்.தொந்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சந்தானகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். மேல்சாந்தி பிரகாஷ், பொருளாளர் ரவீந்திரன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், குருநாதர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை தீர்மானமாக மேல்சாந்தி பிரகாஷ் தெரிவித்தார். சபரிமலையின் பழமையான ஆச்சார வழிபாட்டு முறையே சிறந்தது. அதன்படி 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இருமுடி கட்டுவதில்லை. சபரிமலை செல்லும் சுவாமி மார்கள் ஒரு மண்டல பிரம்மாச்சாரிய விரதமிருந்து யாத்திரை செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து