எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதியும்,திறன் வாய்ந்த மென்பொருள் வல்லுநர்களின் எண்ணிக்கையும் பல மடங்கும் பெருகும் என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.
இந்தியா தொழில் கூட்டமைப்பும், தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்திய கனெக்ட் 2018 மாநாடு சென்னையில் நடந்தது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
டிஜிட்டல் பொருளாதாரம் என்பது, தற்பொழுது தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய புரட்சி. இதன் மூலம் மூன்றாவது தொழில் புரட்சி ஏற்படும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். வருங்காலத்தில் மனிதனின் தினசரி நடவடிக்கைகளும், செயல்பாடுகளும், டிஜிட்டல் முறையைச் சார்ந்தே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதனால் இத்துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகி நாட்டின் பொருளாதார நிலை மேம்படும். உலகம் முழுவதும் பரவி வரும் தகவல் தொழில்நுட்ப புரட்சியானது, சமமான வளர்ச்சியை தூண்டுவதற்கும், புதிய கருவிகள், நடைமுறைகள், வளங்கள், சேவைகள், தயாரிப்புகள், திறன் மற்றும் சமீபத்திய தொழில் நுட்பங்களை சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் அடைய வழிவகுக்கிறது.
இதன்மூலம் அதிக வேலை வாய்ப்பு உருவாக்குதல், மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல், குடிமக்களுக்கு விரைவான சேவைகளை வழங்குதல், நேரத்தையும், ஆற்றலையும் சேமித்து, மக்களின் வாழ்க்கையை மிகவும் எளியதாக்குதல் போன்றவற்றை. தகவல் தொழில்நுட்பம் பெரிய அளவில் மாற்றியுள்ளது. மாநிலத்தின் மொத்த தகவல் தொழில்நுட்பவியல் உள்ளடக்கிய சேவை துறையின் பங்களிப்பு, 7.93 சதவீதமாக உள்ளது. தற்காலத் தகவல் தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணங்களான மேகக் கணினியம், இயந்திரக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழில் நுட்பம், முப்பரிமான அச்சிடுதல், மருத்துவத் தொழில் நுட்பம், வேளாண் தொழில் நுட்பம், பல்பொருள் இணையம், மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, அனிமேஷன் மற்றும் விளையாட்டு தரவு பகுப்பாய்வு, வணிக நுண்ணறிவு மென்பொருள், தரவு கிடங்கு மற்றும் தமிழகத்தில் முதலீடுகள் சார்ந்த தரவு மையங்கள் வங்கி மற்றும் வணிக சேவைகளில் தகவல் தொழில்நுட்பவியல் பயன்பாடுகள் போன்றவை அம்மாவின் அரசால் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை இன்று இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப தலைநகரம் என்று கூறுகின்ற வகையில் பல புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளை சென்னையில் திறந்துள்ளன. மற்ற நிறுவனங்களும் சென்னையில் தொடங்க விரும்புகின்றன. நவீன தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றுகின்ற அளவிற்கு மனிதவள ஆற்றல் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணாக்கர்கள் பொறியியல் கல்லூரிகளில் தங்களது கல்வியினை முடித்து விட்டு திறமைமிக்க பொறியாளர்களாக வெளி வருகின்றனர். அவ்வாறு படிப்பை முடித்து வெளிவரும் பொறியாளர்கள், வெளிநாட்டில் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் வகையில், அவர்களது செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்பது அம்மாவின் அரசின் விருப்பமாகும். அதனை நிறைவேற்றும் பொருட்டு, பொறியியல் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு மேம்படுத்துதல் கலந்தாய்வு கூட்டம் ஒன்று என்னால் 10.9.2018 அன்று நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வின் போது மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் வளர்ச்சிக்காக அம்மாவின் அரசு தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கை -2018 ஐ வெளியிட்டது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி மையமும், ஐந்து பொறியியல் மற்றும் பலவகைத் தொழில் நுட்பக் கல்லூரிகளில், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களும் அம்மாவின் அரசால் நிறுவப்பட்டுள்ளன.
திருவாளர்கள் சைமன்ஸ் மற்றும் திருவாளர்கள் டிசைன் டெக் லிமிடெட் ஆகியதொழில் நிறுவனங்களுடன் இணைந்து 546 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இச்சிறப்பு மையங்கள் வாயிலாக, தமிழ்நாட்டில் தொழில் நுட்பக் கல்வி உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல், தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் திறன்களை மாணாக்கர்களிடையே மேம்படுத்துதல், வேலை வாய்ப்பு பெறும் வகையில், திறனை அதிகரிக்கச் செய்தல், தொழிற்சாலைகளின் தற்கால எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு திறனை மேம்படுத்துதல் ஆகிய முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இத்திட்டத்தின் மூலம் பட்டய மற்றும் பட்ட வகுப்புகளில் பயின்று வரும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, அவர்கள் எளிதாக வேலை வாய்ப்பு பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் தொழிலகங்களிலிருந்து கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு அவர்களது தொழில் திறனை மெருகூட்ட இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 2017-18 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 179 கோடி ரூபாயாக இருக்கும் எனவும், மென்பொருள் வல்லுநர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 38 ஆயிரமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தற்பொழுது அளிக்கப்பட்டு வரும் திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியும், திறன் வாய்ந்த மென்பொருள் வல்லுநர்களின் எண்ணிக்கையும் பல மடங்கும் பெருகும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு அணுகுண்டு மிரட்டல் விடுத்த ஈரான்
12 May 2024டெக்ரான் : இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்து உள்ளது.
-
9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் இன்று 4-ம் கட்ட மக்களவை தேர்தல் : முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரம்
12 May 2024புதுடெல்லி : ஆந்திரா, தெலங்கானா உட்பட 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இன்று 4-ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடக்கிறது.
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.