முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கி மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த மலைப்பாம்பு - அலறியடித்து ஓடிய ஊழியர்கள்

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

நேனிங் : வங்கியின் கூரையில் இருந்து சுமார் 1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்ததால், உரையாடலில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர். தெற்கு சீனாவின் நேனிங் மாகாணத்தில் உள்ள சின் செங் வங்கிக் கிளையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வங்கியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

அதில், வங்கி மேம்பாடு குறித்த காலை நேரத்துச் சந்திப்பில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது வங்கியின் மேற்கூரையில் இருந்து சுமார் 1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்தது. திடீரென பாம்பு விழுந்ததால், ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர். அதைத் தொடர்ந்து பாம்பு அருகில் இருந்த சோபாவின் அடியில் சென்று மறைந்தது.

இதனைத் தொடர்ந்து ஊழியர்கள், காவல்துறையினர், ஊழியர்கள், பொதுமக்களின் உதவியுடன் பாம்பைப் பிடித்து, வன விலங்குகள் நல மையத்திடம் ஒப்படைத்தனர். இதனால் வங்கியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து