முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் இருந்து ஊடகத்தினர் உடனடியாக வெளியேற உத்தரவு

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை,சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்த சதி நடப்பதால் அவர்கள் பம்பையில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகு கடந்த 17-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. எனினும், 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதால், இது வரை அந்த வயது பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யவில்லை.  இது வரை 8 பேர் கோவிலுக்கு செல்ல முயன்ற போதிலும் நிலக்கல், பம்பையைத் தாண்டி அவர்களால் செல்ல முடியவில்லை. இதில் பெண் ஆர்வலர் ரெஹானா பாத்திமா மற்றும் பத்திரிகையாளர் கவிதா ஆகிய இருவர் மட்டும் கோயிலுக்கு மிக அருகில் சென்றனர். ஆனாலும் அவர்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்திவிட்டனர்.
இதே போல் ஆந்திராவைச் சேர்ந்த வசந்தி (41), ஆதிசேஷி (42) ஆகிய 2 பெண்கள் ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக பம்பை வழியாக மலையேற முயன்றனர். அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவர்கள் கோயில் நடைமுறைகளை மீற விரும்பாததால் திரும்பிச் செல்கிறோம் என போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் சில பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்.இந்த நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானம், 5 நாட்களுக்குப் பிறகு நேற்று நடை சாத்தப்பட்டது. பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் குழுமியுள்ள ஊடக குழவினரை அங்கிருந்து வெளியேறுமாறு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். கடைசி நாளில் ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு கருதி ஊடகத்தினர்கள் அங்கிருந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து