எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை,- சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் சிறு பல் பொருள் விற்பனை அங்காடி துவக்க விழா நிகழ்ச்சி சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் முன்னிலையில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திறந்து வைத்து பேசுகையில்
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஒவ்வொரு முறையும் முதல்வராக இருந்த கால கட்டத்தில் கூட்டுறவுத்துறைக்கு தனி;கவனம் எடுத்து தேவையானநிதிகளை வழங்கி புதிய திட்டங்களை செயல்படுத்தி வந்தார் காரணம் அடித்தட்டு மக்களின் தேவைகளை நேரில் சென்று உடனுக்குடன் வழங்கும் துறை கூட்;டுறவு துறைதான். இன்றைய காலகட்டத்தில் கிராம பகுதிகளில் சிறந்த வங்கியாக செயல்படுவது கூட்டுறவு வங்கிதான். அந்த அளவிற்கு இன்றும் கிராம பகுதி மக்கள் முழு பயன்பாட்டில் இருந்துவருகின்றன. அதுமட்டுமின்றி ;விவசாயிகளுக்கு கூட்டுறவு துறை முக்கிய பங்கு வகுகின்றது. விவசாய காலகட்டங்களில் விவசாயத்திற்கு தேவையான அனைத்த இடு பொருள்களும் சரியான விலையில் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் அடித்தட்டு மக்கள் விவசாய பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்பது மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நோக்கம்;. அதை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திட்டங்களை செயல்படுத்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் நடுத்தட்டு மக்களின் அன்றாட தேவையான பொருள்கள் சரியான விலையில் தரமான பொருள்கள் பெற்றிடும் வகையில் பாம்கோ மூலம் பல்பொருள் அங்காடி அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு தேவையான பொருள்களை வழங்கும் வகையில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் இன்று மூன்று சிறு பல் பொருள் அங்காடி மையம் துவக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் விரைவில் ஏழு கடைகள் திறக்கப்பட உள்ளன. இதன் மூலம் பொது மக்களுக்கு தேவையான மளிகை பொருள்களில் இருந்து அனைத்து பொருள்களும் மற்ற வணிக நிறுவனங்களை விட குறைந்த விலையில் தரமான வகையில் வழங்கப்படும். பொதுமக்களாகிய நீங்கள் பயன்பெற வேண்டும் மேலும் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பல் பொருள் அங்காடி அமைக்கப்படும்.
கூட்டுறவு துறையின் மூலம் மேலும் சுழல்நிதி கடன்கள், விவசாய கடன்கள் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பகுதி ஒரு விவசாயம் நிறைந்த பகுதி விவசாயத்தினை மட்டுமே நம்பி உள்ள நிலையில் பெண்கள் கூட்டுத் தொழில் புரியும் வகையில் கறவை மாடு மற்றும் ஆடு வளர்த்தல் போன்ற இணை தொழில்;களையும் மேற்கொள்ள வேண்டும் அதற்கு தேவையான கடன் உதவிகளை கூட்டுறவு வங்கி வழங்கி வருகிறது. அது போல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களிடமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் மூலம் சிவகங்கை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் துவங்க உள்ளன.
அதே போல் துறை வாரியாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்களையும் சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது அவர்களும் மாவட்டத்திற்கு வருகை தந்து தேவையான திட்டங்களை வழங்க உள்ளார்கள் இது போல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நானும் எனக்கு துணையாக நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மற்ற மேனமினிக்கி அரசியல் வாதிகள் போன்று வேசம் போடுபவர்கள் நாங்கள் அல்ல என்றும் மக்களுக்காக உழைக்கக்கூடியவர்கள். காரணம் எங்களை போன்ற எளிய தொண்டர்களை உருவாக்கியது மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அவர்களின் எண்ணப்படி நாங்கள் பதவியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி என்றுமே மக்களுக்காக உழைக்கக் கூடியவர்கள் நாங்கள். மக்களின் அத்தியாவசிய தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் நானும், நாடாளுமன்ற உறுப்பினரும் கிராமம் தோறும் சென்று கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றி வருகிறோம். அதன்படி, உங்களுக்கு தேவையான கோரிக்கைகளை தெரிவித்து அரசின் திட்டங்களை பெற்று சிறப்புடன் வாழ்ந்திட வேண்டும் என மாண்புமிகு கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
பின்னர், பல்பொருள் அங்காடியில் பொதுமக்களுக்கு முதல் விற்பனையினை துவக்கி வைக்கும் வகையில் பொருள்களை மாண்புமிகு கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்; அவர்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து என.;ஜி.ஓ காலணி மற்றும் பர்மா காலனியில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் சிறு பல் பொருள் அங்காடி விற்பனை மையங்களை திறந்து வைத்தார்.
இந்நிகழ்சியில் கூட்டுறவுத் துறை இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், சிவகங்கை மாவட்ட ஆவின் சங்க தலைவர் அசோகன், துணை பதிவாளர் (மேலான்மை இயக்குநர் திருவள்ளுவர், காரைக்குடி சரக துணை பதிவாளர் முத்து, பாம்கோ நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், பாம்கோ பொது மேலாளர் சண்முக வேல், பாம்கோ கூட்டுறவு சங்க துணை தலைவர் காளிதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.