முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு திண்டுக்கல்லில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தீர்ப்பு வெளியானதையடுத்து திண்டுக்கல்லில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
தகுதி ஞிக்கம் செய்யப்பட்டு டி.டி.வி.தினகரன் அணியில் உள்ள 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான 3வது ஞிதிபதி அளித்த தீர்ப்பு நேற்று வெளியானது. இதில் சபாநாயகர் தனபால், 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிஞிக்கம் செய்தது செல்லும் என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். திண்டுக்கல்லில் மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான வி.மருதராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக எம்.ஜி.ஆர். சிலைக்கு வந்தனர். அங்கு பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் 2வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் சி.எஸ்.ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், முன்னாள் ஆவின் சேர்மன் திவான்பாட்சா, நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், வழக்கறிஞர் மனோகரன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபாலன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து