முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. அதிகாரிகளிடையிலான சர்ச்சை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு நேர்மையான விசாரணைக்கு உதவும்: ஜெட்லி

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,சி.பி.ஐ. இயக்குனர்கள் தொடர்பான சர்ச்சையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவானது நேர்மையான விசாரணைக்கு உதவும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். சி.பி.ஐ. இயக்குநர் அலோக் குமார், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோரை கட்டாய விடுப்பில் செல்லுமாறு உத்தரவிட்ட மத்திய அரசு, சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வர ராவை நியமித்தது. இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிராக அலோக் குமார் வர்மா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது தலைமை நீதிபதி ரஞ்சய் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு அலோக் குமார் வர்மா மனு மீது மத்திய அரசு, சி.பி.ஐ. மற்றும் சி.வி.சி. பதிலளிக்க வேண்டும். சி.பி.ஐ.யின் தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வர ராவ், பெரிய அளவில் கொள்கை முடிவு எதையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-விசாரணைக்கு இரு வார கால அவகாசம் அளித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவானது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதன்மூலம் விசாரணையின் நேர்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படும். ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி நியமிக்கப்பட்டிருப்பது நியாயமான விசாரணைநடைபெறுவதை உறுதி செய்யும். வர்மா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதால் நேர்மையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டே, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை நாங்கள் நேர்மறையான முன்னேற்றமாகவே பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து