எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி.-காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் QS தரம் மற்றும் மதிப்பீடு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்துப்பட்டறை பல்கலைக்கழக கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இக்கருத்துப்பட்டறையின் முக்கிய நோக்கம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் இணைப்புக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே QS தரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் QS தரவரிசையில் இடம்பெறுவதற்கு தேவையான வழிமுறைகளை தெரிந்துகொள்ளுதல் ஆகும்.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா.இராஜேந்திரன் இக்கருத்துப்பட்டறையை தொடங்கி வைத்து உரை நிகழ்த்துகையில் QS என்பது ஒரு கல்வி நிறுவனத்தின் தரத்தையும் அதன் தனிப்பட்ட தன்மையையும் குறிக்கும் அடையாளமாகும். மாணவர்கள், பெற்றோர்கள், அரசாங்கம் மற்றும் பெரு நிறுவனங்கள் உட்பட பலரின் உலகலாவிய நம்பகதன்மையை பெற்றுள்ளது. தற்போதைய உலகலாவிய சூழலில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு QS உலக பல்கலைக்கழக தரவரிசையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார். மேலும் அழகப்பா பல்கலைக்கழகம் 9000 கல்வி நிறுவனங்களில் QS-BRICS தரவரிசை-2019-ல் 104-வது இடத்தையும், QS-INDIA தரவரிசையில் 20-வது இடத்தையும் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டு இதற்கு முக்கிய காரணம் இப்பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த துணைவேந்தர்கள், அதிகாரிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பே ஆகும் என்றார்.
மேலும் அழகப்பா பல்கலைக்கழகம் QS-ASIA பல்கலைக்கழக தரவரிசை-2019-ல் 505 தரம்பெற்ற பல்கலைக்கழகங்களின் வரிசையில் அழகப்பா பல்கலைக்கழகம் 216-வது இடத்தை பெற்றுள்ளது என்றும், QS-INDIA-ASIA தரவரிசையில் இந்திய அளவில் 24-வது இடத்தை பெற்றுள்ளது என்பதையும் பெருமையுடன் தெரிவித்தார். தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மட்டுமே இந்த தரவரிசையில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களுரு QS-I GAUGE மதிப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் .சந்தோஷ் கருணானந்தா தமது சிறப்புரையில் போட்டிகள் நிறைந்த கல்விச் சூழலில் QS உலக பல்கலைக்கழக தரவரிசையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார். மேலும் QS தரத்திற்கான வழிமுறைகள் மற்றும் பல்வேறு அளவீடுகள் குறித்து எடுத்துக்கூறி அவற்றில் முக்கியமாக பேராசிரியர்களின் தரம், மாணவர்களின் பன்முகத்தன்மை, வேலைவாய்ப்பு, கற்றல் மற்றும் கற்பித்தல், மேம்படுத்தப்பட்ட வசதிகள், சமுக பொறுப்புகள் மற்றும் தரமதிப்பீடு ஆகியன அடங்கும். மேலும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரம் மற்றும் மதிப்பீடு குறித்து தெளிவாக விளக்கினார். உலகளவில், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே நற்பெயரை பெறுவதற்கு இந்த QS-I GAUGE மதிப்பீடு உறுதுணையாக இருக்கும் என்றார்.
சர்வதேச அளவில் பல்கலைக்கழகத்தினுடைய பெருமையையும், வளர்ச்சியையும் எடுத்துச்செல்லும் வகையில் பெங்களுருவில் செயல்பட்டுவரும் QS-I GAUGE மதிப்பீடு நிறுவனத்துடன் அழகப்பா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மேற்படி நிறுவனம் 9 அளவீடுகள் மூலமாக 70 குறிகாட்டிகள் அடிப்படையில் டைமன்ட் பிளஸ், டைமன்ட், கோல்டு மற்றும் சில்வர் என்ற தரமதிப்பீட்டினை வழங்கும். இந்த மதிப்பீடானது லண்டனிலுள்ள QS நுண்ணறிவு பிரிவால் ஆய்வு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இக்கருத்துப்பட்டறையில் புல முதன்மையர்கள், இயக்குனர்கள், பேராசிரியர்கள், அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளைச் சார்ந்த முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ஹா.குருமல்லேஷ் பிரபு அனைவரையும் வரவேற்றார். கல்லூரி வளர்ச்சிக் குழுமம் முதன்மையர், பேராசிரியர் எஸ். இராஜமோகன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,