முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கை கலெக்டர் ஜெ.ஜெயகாந்தன், தலைமையில் “தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

புதன்கிழமை, 31 அக்டோபர் 2018      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை,-    சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்   மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி
         இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்.
         இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா, தேவகோட்டை சார் ஆட்சியர் ஆஷா அஜீத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சக்திவேல் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து