முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன்னுடைய அதிகார பசிக்காக, தன் கைக்கூலிகளை வைத்து தேவர் திருமகனார் - அம்மா படங்களை கிழித்தெறிவதா? தினகரனுக்கு அம்மா பேரவை கண்டன தீர்மானம்

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      மதுரை
Image Unavailable

மதுரை,- தன்னுடைய அதிகார பசிக்காக தன் கைக்கூலிகளை வைத்து தேவர் திருமகனாரின் படத்தையும், புரட்சித்தலைவி அம்மா படத்தையும் கிழித்தெறிந்து காட்டுதர்பார் நடத்திய டி.டி.வி.தினகரனுக்கு  கடும் கண்டனம் தெரிவித்து கழக அம்மா பேரவையின் சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றினார்.
கடந்த 30-ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 111-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் டி.டி.வி.தினகரன் சென்ற போது அங்கே அ.தி.மு.க.  சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை அவரின் கைக்கூலிகள் சேதப்படுத்தினர்.  இதில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் படமும், அம்மா படமும் சேதப்படுத்தப்பட்டது.  இதனையொட்டி அப்பகுதியில் டி.டி.வி.தினகரனுக்கு கடும் கண்டண குரல்களை அப்பகுதி மக்கள் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையொட்டி மதுரையில் அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் அம்மா பேரவை செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
தீர்மானம் :1
தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக நினைத்து, தென்னாட்டு புத்தராய் வாழ்ந்த பசும்பொன் தேவர் திருமகனாருக்கு பதிமூன்றரை கிலோ எடையுள்ள  தங்க கவசத்தை அம்மா வழங்கினார். அந்த தங்க கவசத்தில் அருள்பாலித்துக் கொண்டிருந்த பசும்பொன் திருமகனாரை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்களும், நிர்வாகிகளும், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், ஆயிரக்கணக்கான  மகளிரணியினர் முளைப்பாரி ஏந்தியும், அ.தி.மு.க. சார்பில் மரியாதை செய்தனர்.
இதையடுத்து பசும்பொன்னிற்கு சென்ற தினகரனுக்கு மக்கள் தன்னை வரவேற்கவில்லை, தனக்கு கூட்டம் இல்லை, தனக்கு வரவேற்பு பேனர்கள் இல்லை. பசும்பொன் புண்ணிய பூமி இடத்தில் தனது அரசியல் சாயம் வெளுத்து விட்டது என்ற வேதனை எழுந்தது. அதனால் எழுந்த வெளிப்பாட்டில் தன்னுடைய அதிகார பசியால் தன் கைக்கூலிகளை வைத்து உலக மக்கள் தெய்வமாக வணங்கும் தேவர் திருமகனாரின் திருவுருவ படம் தாங்கி அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட பேனர்களையும், தொண்டர்களின் இதயங்களில் தெய்வமாக வணங்கப்பட்டு வரும் அம்மாவின் திருவுருவ படம் தாங்கி அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட பேனர்களையும் தனது மிருக குணத்தை வெளிப்படுத்தும் வகையில் கிழித்தெறிந்து மக்கள் முன் காட்டுதர்பார் நடத்தியுள்ளனர்.
இதன் மூலம் முதல்வர் மற்றும் துணை முதல்வர் நிழல் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி இதன் மூலம் பசும்பொன் தேவர் திருமகனாருக்கும், அம்மாவின்  புகழுக்கும் களங்கம் ஏற்படுத்திய மக்கள் விரோத சக்தி டி.டி.வி.தினகரனின் அராஜக செயலுக்கு, அ.தி.மு.க.அம்மா பேரவையின் சார்பில் மாபெரும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, ஒன்றரை கோடி தொண்டர்களால் தெய்வமாக வழிபடும் தமிழர்குலசாமி  அம்மாவின்புகழுக்கும், உலக மக்கள் தெய்வமாக வணங்கும் பசும்பொன் தேவர் திருமகனாரின் புகழுக்கும் மீண்டும் இதுபோன்று களங்கப்படுத்தும் செயல்களில் டி.டி.வி. தினரகன் ஈடுபட்டால் அம்மாவின் திருநாமத்தில் இயங்கும் அம்மா பேரவை தலைமையின் உரிய ஆணையை பெற்று தகுந்த பாடம் புகட்டுவோம்  என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அம்மா பேரவை துணைச்செயலாளர் பா.வெற்றிவேல், இணைச்செயலாளர் எம்.இளங்கோவன், மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.தமிழரசன்,  மாவட்ட  துணைச்செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி,  ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், பகுதி செயலாளர் என்.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து