முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெங்களூர் வாலிபர்கள் 4 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 2 டிசம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த வாலிபர்கள் 4 பேர் பலியாகினர்.
பெங்களூர் மாநிலம் லக்ரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன்கள் ஹரிபாபு(26), ஹரீஷ்(24). அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் லோகேஷ்(27). இவர்கள் அனைவரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தங்களது நண்பர் தினேஷின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பெங்களூரில் இருந்து ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுநாத்(30) என்பவர் ஓட்டி வந்துள்ளார். கார் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.
அப்போது அரவக்குறிச்சியில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை கார் முந்திச் செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் சுக்குநூறாக உடைந்தது. இதில் காரில் இருந்த மஞ்சுநாத், லோகேஷ், ஹரிபாபு ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். ஹரீஷ் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் தலைமையில் தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் லாரி டிரைவரான மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து(48) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான நான்கு பேர்களின் உடல்களும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திண்டுக்கல் வந்து கதறி அழுந்தனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அண்ணன், தம்பி உட்பட 4 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம்  அவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து