முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்திய மங்கலத்தில் புலிகள் காப்பகத்தின் அருகில் பொதுமக்கள் புலிகளை காண விழிப்புணர்வு மையம் - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

சனிக்கிழமை, 8 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பொதுமக்கள் புலிகளை காண வசதியாக அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு மையத்தை திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

வனத்துறை மூலம்...

சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு இப்பகுதியில் உள்ள வனம் மற்றும் வன உயிரினம் மக்கள் பங்கேற்புடன் நன்றாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீடித்து நிலைத்த சூழல் சேவைகள் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் வண்ணம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள புலிகள் மற்றும் இதர வன உயிரினங்கள், தாவரங்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பினை நல்குவதற்காக ஒரு வன உயிரின செயல் விளக்க மையம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் வனக்கோட்டம், சத்தியமங்கலம் வனச்சரகத்தில், பண்ணாரி அம்மன் கோயிலுக்கு அருகில் வனத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு மையம்

அருள்மிகு பண்ணாரியம்மன் கோவிலுக்கு அருகே உள்ள 15 எக்டர் பரப்பளவில் புலிகள் விழிப்புணர்வு மையம் ஏற்படுத்தப்பட்டு, இந்த மையத்தில் மக்கள் நடந்து சென்று புலிகள் பற்றியும் அதன் இருப்பிடம் பற்றியும் மற்றும் பாதுகாப்பு அவசியம் பற்றியம் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மூலிகை தோட்டம், வண்ணத்துப்பூச்சியை கவரும் செடிகள் வளர்ப்பு, இயற்கை பொருள் விற்பனை அங்காடி ஆகியவைகள் அமைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு விளையாட தேவையான வசதிகளும் இந்த விழிப்புணர்வு மையத்தில் இடம் பெற்றுள்ளன. இதன் திறப்பு நேற்று நடைபெற்றது.

அமைச்சர்கள்...

இந்த விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணனன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்துவைத்தனர். விழாவில், பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரன், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறை தலைவர்), மல்லேசப்பா முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரின காப்பாளர், .ரகுநாத் . கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (புலிகள் திட்டம்), .வெங்கடேஷ் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் நாகநாதன் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர்.கதிரவன் மாவட்ட ஆட்சித் தலைவர், ஈரோடு மாவட்டம்.பு.கோ.அருண்லால், மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர், சத்தியமங்கலம் வனக்கோட்டம் கோ.அருண்லால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து