எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் ஆடு வளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது. குறைந்த எண்ணிக்கையில் ஆடுகளை வளர்த்து அதன் மூலம் வருவாய் பெறும் நிலை பெருமளவில் நிலவுகிறது. சிறு பண்ணையாளர்கள் வளர்ப்பு மாடுகளில் நோய் தாக்கம் ஏற்படும் போது நவீன மருத்துவ முறைகள் மற்றும் மருந்து பொருட்களால் அவர்களுக்கு அதிக பொருட்செலவு ஏற்படுகிறது.
கால்நடை வளர்ப்போர் தாங்களாகவே ஆண்டிபயாடிக் எனப்படும் எதிருயிரி மருந்துகளை பயன்படுத்துவதால் உயிர் கொல்லி எதிர்ப்பை உண்டாக்கும். அதாவது மருந்துகள் நோய் எதிர்ப்பு தன்மையை இழந்து விடுகின்றன. உணவு பயன்பாட்டிற்காக பராமரிக்கப்படும் கால்நடைகளில் உபயோகப்படுத்தப்படும் ஒவ்வொரு மருந்திற்கும் வித்டிராயல் பிரீயட் எனப்படும் விலக்கு காலம் கண்டிப்பாக அளிக்க வேண்டும்.
அதாவது கடைசியாக மருந்து உட்செலுத்திய பின் குறிப்பிட்ட கால அளவிற்கு கால்நடைகளிலிருந்து பெறப்படும் உணவு பொருட்களை பயன்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இல்லையெனில் இவற்றில் உள்ள மருந்துப் பொருட்களின் எச்சம் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தால் பரிந்துரைக்கப்படும் மரபுசார் மூலிகை மருத்துவ முறைகள் சிறு பண்ணையாளர்களுக்கு எளிய, அதிக பொருட் செலவில்லாத மருத்துவ முறையாக அமைவதுடன் மருத்துவப் பொருட்களின் எச்சங்கள் இல்லாத இறைச்சி உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. குடற்புழு நீக்கம் வளர்ந்த ஆடுகளுக்கு 2 அங்குல நீல சோற்றுக் கற்றாழையின் முள்ளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
வயிறு உப்புசம்
வெற்றிலை - 3, தரமான மிளகு - 10, பெருங்காயம் - 5 கிராம், இஞ்சி - 50 கிராம், சீரகம் அரை தேக்கரண்டி ஆகியவற்றை நன்றாக அரைத்து நாட்டு சர்க்கரை 50 கிராம் சேர்த்து சாப்பிட வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு வேளை என இரண்டு நாட்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த அளவு 5 ஆடுகளுக்கானது.
சளித் தொல்லை
துளசி, முருங்கை இலை தலா ஒரு கைப்பிடி, ஆடுதொடா, தூதுவளை தலா இரு இலை, மஞ்சள், மிளகு, சீரகம் தலா ஒரு தேக்கரண்டி ஆகியவற்றை அரைத்து அதோட 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒருவேளை என இரண்டு நாட்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த அளவு 5 ஆடுகளுக்கானது.
கழிச்சல்
சின்ன சீரகம், கசகசா, வெந்தயம் தலா 10 கிராம், மிளகு - 5 எண்ணிக்கை, மஞ்சள் தூள் 5 கிராம், பெருங்காயம் 5 கிராம் ஆகியவற்றை நன்கு கருகும் வரை வறுத்து நீர் தெளித்து இடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் 2 பல் வெங்காயம், 2 பல் பூண்டு, 10 கறிவேப்பிலை மற்றும் 100 கிராம் கருப்பட்டியுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி உப்பினில் தோய்த்து நாக்கின் மேல் தடவி உட் செலுத்த வேண்டும். இது நான்கு ஆடுகளுக்குத் தேவையான மருந்து.
பேன், உண்ணி
50 கிராம் வசம்பை தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைத்து நசுக்கி அதோடு நான்கு ஓமவல்லி இலை, தலா ஒரு கைப்பிடி தும்பை, வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து ஆட்டின் மேல் பூசி காயவிட வேண்டும். பிறகு தேங்காய் நாரால் தேய்த்து கழுவிவிட வேண்டும். மழைக்காலம்இ ஈரமான சூழ்நிலைகளில் இதனை தவிர்க்க வேண்டும்.
குளம்பு புண்
கால் குளம்பினை உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரினால் நன்கு கழுவி ஈரத்தை துடைக்க வேண்டும். பின்னர் தலா ஒரு கைப்பிடி துளசி மற்றும் குப்பைமேனி இலை, 4 பல் பூண்டு, 10 கிராம் மஞ்சள் தூள் ஆகிய பொருட்களை அரைத்து 100 மி.லி நல்லெண்ணெயில் வதக்கி ஆறியவுடன் குளம்பில் தடவவும்.
ஆட்டுக்கொல்லி நோய்
சீரகம், வெந்தயம், தலா 10 கிராம், மிளகு 5 எண்ணம் ஆகியவற்றை இடித்து மஞ்சள் தூள் 10 கிராம், பிரண்டை 5 கொழுந்து, பூண்டு 5 பல், முருங்கை இலை ஒரு கைப்பிடி 500 கிராம் கருப்பட்டி ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக நாக்கின் மேல் தேய்த்து கொடுக்க வேண்டும். இதனை நாளொன்றுக்கு மூன்று முறை அளிக்க வேண்டும்.
ஆட்டமை வாய்வழி மருந்து
சீரகம், வெந்தயம், மிளகு தலா 5 கிராம் தண்ணீரில் ஊற வைத்து அரைத்து ஐந்து கிராம் மஞ்சள்தூள், இரண்டு பல் பூண்டு, தலா ஒரு கைப்பிடி வேப்பிலை, முருங்கை, துளசி திருநீற்றுப்பச்சிலை இலை மற்றும் நிலவேம்பு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உப்பினில் தோய்த்து நாக்கின் மேல் தேய்த்து உட்செலுத்த வேண்டும்.
வெளிபூச்சு மருந்து
மேற்கூறிய மருந்து பொருட்களுடன் தலா ஒரு கைப்பிடி குப்பைமேனி, தும்பை சேர்த்து அரைத்து தலா 100 மி.லி விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் சேர்த்து காய்ச்சி ஆறியவுடன் அம்மை கொப்பளம் உள்ள இடங்களில் தடவ வேண்டும்.
கோமாரி
தலா ஒரு தேக்கரண்டி மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து அதோடு ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு பல் பூண்டு சேர்த்து அரைக்க வேண்டும். அரை மூடி தேங்காயைத் துருவி அரைத்து கலவையோடு சேர்த்து 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட கொடுக்க வேண்டும். இது 5 ஆடுகளுக்கான அளவு. நோய் தாக்கம் உள்ள போது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.
மூலிகை மருத்துவம் மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
பயன்படுத்தும் தாவரம் நச்சுத் தன்மை இல்லாதவை என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். மருந்துகளை புகட்டும் போது பனைவெல்லம் சேர்த்து பிசைந்து நாக்கின் மேல் சிறிது சிறிதாக தடவி உள்ளே புகட்ட வேண்டும். கால்நடைகளின் இருப்பிடத்தை (கட்டுத்தரை) சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை கட்டுத்தரையில் வசம்பு, மஞ்சள், பூண்டு ஊற வைத்து சுண்ணாம்பு நீர் கலந்து தெளித்து விட வேண்டும். கால்நடைகளுக்கு ஏற்ற எளிய முதலுதவி மூலிகை செடிகளை வீட்டில் வளர்த்து கால்நடைகளுக்கு எளிய மருத்துவ உதவி கிடைக்க செய்வோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
தொகுதிவாரியாக நேர்காணல்: கிருஷ்ணகிரி தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
08 Nov 2025கிருஷ்ணகிரி : ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் வெற்றி பெறவில்லையென்றால் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவி பறிபோகும் என கிருஷ்ணகிரி தி.மு.க.
-
59-வது பிறந்தநாள்: சீமானுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
08 Nov 2025சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டு திருத்த புதிய வசதி
08 Nov 2025டெல்லி : செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டை திருத்த புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.
-
தருமபுரியில் இன்று பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப்பயண நிறைவு விழா
08 Nov 2025தருமபுரி : தருமபுரியில் பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப் பயண நிறைவு விழா இன்று நடக்கிறது.
-
பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: சிறுவனின் தாக்குதலில் பெண் உயிரிழப்பு
08 Nov 2025இட்டாநகர் : பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சிறுவனின் கொடூர தாக்குதலில் 40 வயது பெண் உயிரிழந்தார்.
-
ஆந்திரா-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
08 Nov 2025சேலம் : ஆந்திரா - கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
உல்லாசத்திற்கு இடையூறு; கணவரை கொன்ற மனைவி
08 Nov 2025மீரட் : உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனை ஏவி கழுத்தை நெரித்து கொன்ற மனைவியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்ததால் சர்ச்சை
08 Nov 2025பாட்னா : பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
சாதி, மத மோதலை உருவாக்குகிறது: காங்கிரஸ் மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
08 Nov 2025சசராம் : மக்களிடையே சாதி, மத மோதலை உருவாக்குகிறது என்று காங்கிரஸ் கட்சி மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டியுள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை
08 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து நேற்று 3-வது நாளாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
உத்தரபிரதேச மாநிலத்தில் விபரீதம்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் திடீர் தற்கொலை
08 Nov 2025லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
பாகிஸ்தான் ரகசிய அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது : இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு
08 Nov 2025புதுடெல்லி : பாகிஸ்தானின் ரகசிய அணு ஆயுத நடவடிக்கை குறித்து இந்தியா குற்றச்சாட்டியுள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: இஸ்லாமியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை
08 Nov 2025மதுரை : மத்திய அரசுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
-
சீமானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
08 Nov 2025சென்னை : சீமானின் கொள்கையில் பிடிவாதம் வியத்தலுக்குரியவை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
கேரள முன்னாள் அமைச்சர் காலமானார்: பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Nov 2025திருவனந்தபுரம் : கேரள முன்னாள் அமைச்சர் காலமானதை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
-
டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு 12-ம் கனமழை: வானிலை ஆய்வு மையம்
08 Nov 2025சென்னை, தமிழகத்தில் வரும் நவ.12-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
6 நாட்கள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
08 Nov 2025டெல்லி : அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா ஜனாதிபதி திரெளபதி முர்மு புறப்பட்டு சென்றார்.
-
கால்மேகி புயலால் கடும் பாதிப்பு: பிலிப்பைன்ஸில் பலி 188 ஆனது
08 Nov 2025மணிலா : பிலிப்பைன்ஸில் கால்மேகி புயல் ஏற்பட்டது இதில் 188 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கரூர் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது த.வெ.க.
08 Nov 2025கரூர் : கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ.யிடம் ஆதாரங்களை த.வெ.க. ஒப்படைத்தது.
-
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் : 484 முகாம்கள் நடத்தப்பட்டு 7,57,168 பேர் பயன்: அமைச்சர்
08 Nov 2025சென்னை, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: 484 முகாம்கள் நடத்தப்பட்டதில் 7 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
-
மும்பை-லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
08 Nov 2025மும்பை : மும்பை - லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
-
புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். நடைமுறைகளில் குளறுபடி அ.தி.மு.க. கடும் குற்றச்சாட்டு
08 Nov 2025புதுச்சேரி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை புதுச்சேரி தேர்தல் துறை சீர்குலைத்து வருகிறது என்று புதுச்சேரி அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.
-
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: காசாவில் 69 ஆயிரம் பேர் பலி
08 Nov 2025காசா சிட்டி, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 69 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ரஷ்ய எண்ணெய் தடையில் இருந்து ஹங்கேரிக்கு விலக்கு: ட்ரம்ப் அறிவிப்பு
08 Nov 2025வாஷிங்டன், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து ஹங்கேரிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விலக்கு அளித்துள்ளார்.
-
வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு: ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம்: ராஜ்நாத் பேச்சு
08 Nov 2025பாட்னா : வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு குறித்து ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


