திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள 'ஆய்வக மெக்கானிக்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் ஆடு வளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது. குறைந்த எண்ணிக்கையில் ஆடுகளை வளர்த்து அதன் மூலம் வருவாய் பெறும் நிலை பெருமளவில் நிலவுகிறது. சிறு பண்ணையாளர்கள் வளர்ப்பு மாடுகளில் நோய் தாக்கம் ஏற்படும் போது நவீன மருத்துவ முறைகள் மற்றும் மருந்து பொருட்களால் அவர்களுக்கு அதிக பொருட்செலவு ஏற்படுகிறது.
கால்நடை வளர்ப்போர் தாங்களாகவே ஆண்டிபயாடிக் எனப்படும் எதிருயிரி மருந்துகளை பயன்படுத்துவதால் உயிர் கொல்லி எதிர்ப்பை உண்டாக்கும். அதாவது மருந்துகள் நோய் எதிர்ப்பு தன்மையை இழந்து விடுகின்றன. உணவு பயன்பாட்டிற்காக பராமரிக்கப்படும் கால்நடைகளில் உபயோகப்படுத்தப்படும் ஒவ்வொரு மருந்திற்கும் வித்டிராயல் பிரீயட் எனப்படும் விலக்கு காலம் கண்டிப்பாக அளிக்க வேண்டும்.
அதாவது கடைசியாக மருந்து உட்செலுத்திய பின் குறிப்பிட்ட கால அளவிற்கு கால்நடைகளிலிருந்து பெறப்படும் உணவு பொருட்களை பயன்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இல்லையெனில் இவற்றில் உள்ள மருந்துப் பொருட்களின் எச்சம் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தால் பரிந்துரைக்கப்படும் மரபுசார் மூலிகை மருத்துவ முறைகள் சிறு பண்ணையாளர்களுக்கு எளிய, அதிக பொருட் செலவில்லாத மருத்துவ முறையாக அமைவதுடன் மருத்துவப் பொருட்களின் எச்சங்கள் இல்லாத இறைச்சி உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. குடற்புழு நீக்கம் வளர்ந்த ஆடுகளுக்கு 2 அங்குல நீல சோற்றுக் கற்றாழையின் முள்ளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
வயிறு உப்புசம்
வெற்றிலை - 3, தரமான மிளகு - 10, பெருங்காயம் - 5 கிராம், இஞ்சி - 50 கிராம், சீரகம் அரை தேக்கரண்டி ஆகியவற்றை நன்றாக அரைத்து நாட்டு சர்க்கரை 50 கிராம் சேர்த்து சாப்பிட வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு வேளை என இரண்டு நாட்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த அளவு 5 ஆடுகளுக்கானது.
சளித் தொல்லை
துளசி, முருங்கை இலை தலா ஒரு கைப்பிடி, ஆடுதொடா, தூதுவளை தலா இரு இலை, மஞ்சள், மிளகு, சீரகம் தலா ஒரு தேக்கரண்டி ஆகியவற்றை அரைத்து அதோட 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒருவேளை என இரண்டு நாட்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த அளவு 5 ஆடுகளுக்கானது.
கழிச்சல்
சின்ன சீரகம், கசகசா, வெந்தயம் தலா 10 கிராம், மிளகு - 5 எண்ணிக்கை, மஞ்சள் தூள் 5 கிராம், பெருங்காயம் 5 கிராம் ஆகியவற்றை நன்கு கருகும் வரை வறுத்து நீர் தெளித்து இடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் 2 பல் வெங்காயம், 2 பல் பூண்டு, 10 கறிவேப்பிலை மற்றும் 100 கிராம் கருப்பட்டியுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி உப்பினில் தோய்த்து நாக்கின் மேல் தடவி உட் செலுத்த வேண்டும். இது நான்கு ஆடுகளுக்குத் தேவையான மருந்து.
பேன், உண்ணி
50 கிராம் வசம்பை தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைத்து நசுக்கி அதோடு நான்கு ஓமவல்லி இலை, தலா ஒரு கைப்பிடி தும்பை, வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து ஆட்டின் மேல் பூசி காயவிட வேண்டும். பிறகு தேங்காய் நாரால் தேய்த்து கழுவிவிட வேண்டும். மழைக்காலம்இ ஈரமான சூழ்நிலைகளில் இதனை தவிர்க்க வேண்டும்.
குளம்பு புண்
கால் குளம்பினை உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரினால் நன்கு கழுவி ஈரத்தை துடைக்க வேண்டும். பின்னர் தலா ஒரு கைப்பிடி துளசி மற்றும் குப்பைமேனி இலை, 4 பல் பூண்டு, 10 கிராம் மஞ்சள் தூள் ஆகிய பொருட்களை அரைத்து 100 மி.லி நல்லெண்ணெயில் வதக்கி ஆறியவுடன் குளம்பில் தடவவும்.
ஆட்டுக்கொல்லி நோய்
சீரகம், வெந்தயம், தலா 10 கிராம், மிளகு 5 எண்ணம் ஆகியவற்றை இடித்து மஞ்சள் தூள் 10 கிராம், பிரண்டை 5 கொழுந்து, பூண்டு 5 பல், முருங்கை இலை ஒரு கைப்பிடி 500 கிராம் கருப்பட்டி ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக நாக்கின் மேல் தேய்த்து கொடுக்க வேண்டும். இதனை நாளொன்றுக்கு மூன்று முறை அளிக்க வேண்டும்.
ஆட்டமை வாய்வழி மருந்து
சீரகம், வெந்தயம், மிளகு தலா 5 கிராம் தண்ணீரில் ஊற வைத்து அரைத்து ஐந்து கிராம் மஞ்சள்தூள், இரண்டு பல் பூண்டு, தலா ஒரு கைப்பிடி வேப்பிலை, முருங்கை, துளசி திருநீற்றுப்பச்சிலை இலை மற்றும் நிலவேம்பு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உப்பினில் தோய்த்து நாக்கின் மேல் தேய்த்து உட்செலுத்த வேண்டும்.
வெளிபூச்சு மருந்து
மேற்கூறிய மருந்து பொருட்களுடன் தலா ஒரு கைப்பிடி குப்பைமேனி, தும்பை சேர்த்து அரைத்து தலா 100 மி.லி விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் சேர்த்து காய்ச்சி ஆறியவுடன் அம்மை கொப்பளம் உள்ள இடங்களில் தடவ வேண்டும்.
கோமாரி
தலா ஒரு தேக்கரண்டி மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து அதோடு ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு பல் பூண்டு சேர்த்து அரைக்க வேண்டும். அரை மூடி தேங்காயைத் துருவி அரைத்து கலவையோடு சேர்த்து 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட கொடுக்க வேண்டும். இது 5 ஆடுகளுக்கான அளவு. நோய் தாக்கம் உள்ள போது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.
மூலிகை மருத்துவம் மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
பயன்படுத்தும் தாவரம் நச்சுத் தன்மை இல்லாதவை என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். மருந்துகளை புகட்டும் போது பனைவெல்லம் சேர்த்து பிசைந்து நாக்கின் மேல் சிறிது சிறிதாக தடவி உள்ளே புகட்ட வேண்டும். கால்நடைகளின் இருப்பிடத்தை (கட்டுத்தரை) சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை கட்டுத்தரையில் வசம்பு, மஞ்சள், பூண்டு ஊற வைத்து சுண்ணாம்பு நீர் கலந்து தெளித்து விட வேண்டும். கால்நடைகளுக்கு ஏற்ற எளிய முதலுதவி மூலிகை செடிகளை வீட்டில் வளர்த்து கால்நடைகளுக்கு எளிய மருத்துவ உதவி கிடைக்க செய்வோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
கலாச்சாரம், கல்வித்துறைகளில் நேபாளம், இந்தியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
16 May 2022லும்பினி : கலாச்சாரம், கல்வித்துறைகளில் நேபாளம், இந்தியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
-
அமெரிக்காவில் அடுத்தடுத்து சோகம்: கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த துப்பாக்கி சூடு - ஒருவர் பலி
16 May 2022கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் புகுந்த மர்ம மனிதன் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்
-
தாமஸ் கோப்பை பாட்மிண்டனில் சாம்பியன்: இந்தியா அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தது மத்திய அரசு
16 May 2022பாங்காக் : தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்தோனேஷியாவை வீழ்த்தி, இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
-
திருப்பூர், ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து 20 ஆயிரம் பனியன், ஜவுளி நிறுவனங்கள் அடைப்பு : 410 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு
16 May 2022திருப்பூர் : நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், ஈரோட்டில் இருக்கும் 20 ஆயிரம் பனியன், ஜவுளி நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
-
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்: அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
16 May 2022சென்னை : தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது என்
-
மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையே ரூ.5,800 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
16 May 2022சென்னை : மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையே ரூ.5,800 கோடியில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழு
-
கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு டிகிரி வழங்க வேண்டும் : ஐ.ஐ.டி.க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
16 May 2022புது டெல்லி : கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு டிகிரி வழங்க வேண்டும் என்று ஐ.ஐ.டிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மத்திய அரசு வரியை குறைத்தும் நூல் விலை குறையாதது ஏன்? - தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி
16 May 2022சென்னை : மத்திய அரசு வரியை குறைத்தும் நூல் விலை குறையாதது ஏன்? என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தமிழை பிற மாநிலங்களில் 3-வது மொழியாக சேர்க்க முயற்சிப்பேன் : பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி பேச்சு
16 May 2022சென்னை : பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சிப்பேன் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
-
நடப்பு ஐ.பி.எல் தொடர்: பிளேஆப் சுற்றுக்கு நுழைய 5 அணிகள் கடும் போட்டி
16 May 2022மும்பை : நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு நுழைய பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 5 அணிகள் கடும் போட்டி நிலவுகிறது.
-
கொரோனா பரவலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் : வடகொரியா அதிபர் குற்றச்சாட்டு
16 May 2022பியோங்யாங் : வடகொரியாவில் கொரோனா பரவலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று அதிபர் கிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஷமி, முகேஷ் செளத்திரிக்கு முதலிடம்
16 May 2022பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஷமி, முகேஷ் செளத்திரிக்கு முதலிடம்
-
புதிதாக 2,202 பேருக்கு தொற்று: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2-வது நாளாக சரிந்தது
16 May 2022புதுடெல்லி : புதிதாக 2,202 பேருக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில், இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2-வது நாளாக சரிந்துள்ளது.
-
பட்ட காலிலே படும் - கெட்ட குடியே கெடும் - இலங்கையில் கனமழை, வெள்ளம் : 600 குடும்பங்களுக்கு கடும் பாதிப்பு
16 May 2022கொழும்பு : இலங்கையின் மேற்கு பகுதியில் கனமழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
-
வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள் பட்டியல் வெளியீடு: ஐ.நா அறிக்கையில் தகவல்
16 May 2022நியூயார்க் : வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளில் பாகிஸ்தானையும் ஐ.நா. தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது.
-
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்பட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
16 May 2022சென்னை : தமிழ்நாட்டில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வாயிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இளங்கலை மருத்துவ நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
16 May 2022புதுடெல்லி : இளங்கலை மருத்துவ நீட் தேர்வுகான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம்: இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்
16 May 2022கொழும்பு : மீண்டும் வன்முறை வெடிக்கும் சூழல் காரணமாக இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
-
உலகின் மிக உயர எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் இந்திய மருத்துவ தம்பதி
16 May 2022அகமதாபாத் : உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டை தொட்ட முதல் இந்திய மருத்துவ தம்பதி என்ற பெயரை குஜராத்தை சேர்ந்த இருவர் பெற்றுள்ளளனர்.
-
முத்தம் கொடுப்பது இயற்கைக்கு மாறான பாலியல் குற்றம் அல்ல : மும்பை ஐகோர்ட் அதிரடி
16 May 2022மும்பை : முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள் அல்ல என்று 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான நபருக்கு ஜாமீன்
-
சென்னை அணியில் டோனி மேலும் சில ஆண்டுகள் தொடர வாய்ப்பு : சுனில் கவாஸ்கர் கணிப்பு
16 May 2022மும்பை : சி.எஸ்.கே-வில் தொடர விரும்பவில்லை எனில் டோனி மீண்டும் கேப்டனாகி இருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் சென்னை அணியில் டோனி மேலும் சில ஆண்டுகள் தொட
-
மாணவர்களிடையே மோதல்: கிருஷ்ணகிரி அருகே 10-ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து-காயம்
16 May 2022கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பத்தாம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி
-
நுழைவுத் தேர்வுகள் மூலம் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளை : அமைச்சர் பொன்முடி பேச்சு
16 May 2022சென்னை : நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் மூலம் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடித்து வருகின்றன என்று சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர
-
தமிழகத்தில் ஜவுளித்தொழில் பரவலாக பாதிப்பு: பருத்தி, நூல் விலை உயர்வால் ஏற்படும் இடையூருகளை கட்டுப்படுத்துங்கள் : பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்
16 May 2022சென்னை : பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித்தொழில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், விலை உயர்வால் ஏற்படும் இடையூருகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்
-
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் என்னைக்கொல்ல சதி நடக்கிறது : இம்ரான்கான் சொல்கிறார்
16 May 2022இஸ்லாமாபாத் : உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் என்னைக்கொல்ல சதி நடக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் புலம்பி இருக்கிறார்.