முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் லாரி கவிழ்ந்து விபத்து- 8 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

பலிகுடா, ஒடிசாவில் உள்ள கந்தமால் பகுதியில் லாரி கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.     

ஒடிசாவின் கந்தமால் மாவட்டம், பாலிகுடா காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று காலை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த லாரியில் சுமார் 40-50 பேர் கதாபூரில் இருந்து பிராமணிகான் நோக்கி பயணம் செய்துள்ளனர்.  பொய்குடா மலைப் பகுதியில் உள்ள ஒரு வளைவில் திருப்ப முற்பட்டபோது, ஓட்டுனரின் கட்டுபாட்டினை இழந்த லாரி, பள்ளத்தாக்கில் திடீரென கவிழ்ந்தது.

இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து