முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை சிவசேனா அலுவலகத்தில் 33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் உருவாக்கப்பட்ட பால் தாக்கரே ஓவியம்

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : சிவசேனா தலைவர் மறைந்த பால் தாக்கரேவின் பிறந்த நாளையொட்டி 33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் உருவாக்கப்பட்ட அவரது முகம் பலரையும் கவர்ந்துள்ளது.

சிவசேனாவின் நிறுவனத் தலைவரான பால் தாக்கரே கடந்த 23-1-1926 அன்று பிறந்து கடந்த 17-11-2012 அன்று காலமானார். நேற்று அவரது பிறந்த நாளை அக்கட்சியினர் மிக எழுச்சியாக கொண்டாடினர்.

முதல்வர் ஒப்படைப்பு

மும்பையில் உள்ள மேயர் ஹவுஸ் இல்லத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என பால் தாக்கரேவின் மகனான உத்தவ் தாக்கரே மகராஷ்டிர அரசை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மேயர் ஹவுஸ் இல்லத்தின் சொத்து பத்திரங்களை மகராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று உத்தவ் தாக்கரேவிடம் ஒப்படைத்தார்.

வியப்பில் ஆழ்த்தியது

இதற்கிடையில், மும்பையில் உள்ள சிவசேனா கட்சி தலைமையகத்தில் பிரபல ஓவியர் ஒருவர் சுமார் 33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் பால்தாக்கரேவின் முகத்தை உருவாக்கி உள்ளார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து