முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிப். 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ்கோயல் நியமனம்

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மத்திய இடைக்கால நிதி அமைச்சராக ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயலை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

 வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சராக உள்ள அருண்ஜெட்லி உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதனையடுத்து தற்போது ரயில்வே அமைச்சராக உள்ள பியூஷ்கோயல் இடைக்கால நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பரிந்துரையை பிரதமர் மோடி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார் . ஜனாதிபதியும் அதற்கான ஒப்புதலை அளித்தார். மேலும் அருண் ஜெட்லி சிகிச்சை முடிந்து இந்தியா வந்து அமைச்சராக பொறுப்பேற்கும் வரையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என மத்திய அர சு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து