முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஞ்சநேயர் கோயில் விபத்தில் உயிரிழந்த அர்ச்சகர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கைங்கர்யப் பணியில் ஈடுபட்டபோது விபத்தில் உயிரிழந்த வெங்கடேசன் என்பவருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

மிக வேதனை...

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில், 27.1.2019 அன்று கைங்கர்யப் பணியில் ஈடுபட்டிருந்த, நாமக்கல் வட்டம், கோட்டை பிரதான சாலையைச் சேர்ந்த  ராதாகிருஷ்ணனின் மகன் வெங்கடேசன் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த 28ம்தேதி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

ரூ.5 லட்சம் நிதி...

கைங்கர்யப் பணியின் போது, நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த வெங்கடேசன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வெங்கடேசன் குடும்ப நிலையினைக் கருத்திற்கொண்டு, சிறப்பினமாக அவருடைய குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் திருக்கோயில் நிதியிலிருந்து நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து