முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

ஜம்மு : புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு, மவுன ஊர்வலம் நேற்று நடத்தப்பட்ட்டது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி  நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். பலியான வீரர்களின் உடல்கள் விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன.

பாலம் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாரமன், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் வீரர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த தாக்குதல் சம்பவம் மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் இரங்கல் மற்றும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலமும் நடத்தப்பட்டது.உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் லடாக் புத்த சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து