முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்கள் கட்சி தலைவர்களை விலைக்கு வாங்க பா.ஜனதா முயற்சி- மம்தா பானர்ஜி

திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை விலைக்கு வாங்க பா.ஜனதா ரெயில்களில் பணத்தை கொண்டுவருகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
2019 தேர்தல் வரவுள்ள நிலையில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா இடையே கடுமையான மோதல் போக்கு காணப்படுகிறது. மாநிலத்தில் 20க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று திட்டமிட்டு பா.ஜனதா செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் எங்கள் கட்சி தலைவர்களை வாங்க பா.ஜனதா ரெயில்களில் பணத்தை கொண்டுவருகிறது என முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

“பா.ஜனதா திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை வாங்க முயற்சி செய்கிறது. எங்கள் தலைவர்களிடம் பேசும் பா.ஜனதா, எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் வாங்கிக்கொள்ளுங்கள், எங்கள் கட்சியில் சேர்ந்து விடுங்கள் என்று கேட்கிறது,” என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி, பெங்காலுக்கு ரெயில்களில் வருகிறார்கள், அவர்கள் பெருமளவு பணத்தை மாநிலத்திற்குள் இறக்குகிறார்கள். இதனை வாக்காளர்களுக்கு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். எனக்கு அனைத்து தகவலும் கிடைத்துள்ளது என கூறியுள்ளார். 2019 தேர்தலுக்கு பின்னர் பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு எந்தஒரு வாய்ப்பும் கிடையாது  எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து