எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை- சிவகங்கை மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான மாதாந்திர ஓய்வுத் திட்டத்திற்கான அடையாள அட்டைகளை வழங்கி எல்லாத் தொழிலாளர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம் என கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தகவல்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் துவக்கமாக குஜராத் மாநிலம் அகமதபாத்திலிருந்து மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் காணொலிக்காட்சியின் மூலமாக துவக்கி வைக்கப்பட்டதையொட்டி அதனை அமைப்பு சாரா தொழிலாளர்கள் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட காணொலிக் காட்சி நிகழ்ச்சியில் ஏராளமான அமைப்பு சாரா தொழிழலாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டைகளை வழங்கி பேசுகையில்,
பாரத பிரதமர் அவர்களும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் முன்னேற்றம் பெற பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக கடந்த வாரம் விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கி வந்த நிலையில் குறு, சிறு விவசாயிகளுக்கு ரூ.6,000- நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல் தமிழக முதலமைச்சர் அவர்களும் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு ரூ.2,000-ம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டு அதுவும் தற்பொழுது பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000- வழங்க புதிய திட்டம் இன்று மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும். குறிப்பாக 18 வயதிலிருந்து 40 வயது வரை உள்ள தொழிலாளர்கள் எந்தப் பணிகளை மேற்கொண்டாலும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவராவார். குறிப்பாக விவசாயப் பணிகளை மேற்கொள்பவர்களும் இத்திட்டத்தில் உறுப்பினர் ஆகலாம். 18 வயது துவக்கத்தில் தொழிலாளராக பணிபுரியும் போது மாதம் ரூ.55- கட்டி தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு உறுப்பினர் கட்டும் பணத்திற்கு நிகராக மத்திய அரசு அவர் கணக்கில் அதற்குரிய பங்குத் தொகையை
வங்கியில் செலுத்தும். இதில் பதிவு செய்பவர்களுக்கு ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு இருந்தால் போதும். உறுப்பினராகச் சேரலாம். நான்கு ஆண்டிற்கு ஒருமுறை ரூ.10- வீதம் உயர்ந்து 40 வயது உறுப்பினர் மாதா மாதம் சந்தாத் தொகையினை கட்டி வரவேண்டும். 40-வது வயதில் மாதம் ரூ.200- வரை சந்தா கட்ட வேண்டும். அதற்கு நிகராக மத்திய அரசு தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தி விடும். 40 வயது முடிவுற்றவுடன் பணம் கட்டத் தேவையில்லை. 60 வயது பூர்த்தியானவுடன் தகுதியுடைய உறுப்பினர்களுக்கு மாதா மாதம் ரூ.3,000- வங்கிக் கணக்கில் ஓய்வூதியமாக வரவு வைக்கப்படும். அதைப் பெற்று பயன்பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் நோக்கம் வயதான காலத்தில் தனக்கு தேவையான உதவிகளைப் பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்திட இத்திட்டம் மிகப் பயனுள்ளதாக இருக்கும். மாவட்ட தொழிலாளர் நல அலுவலகத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்துத் தொழிலாளர்களும் கட்டாயம் இதில் உறுப்பினர்களாகச் சேர்ந்து பயன்பெற வேண்டுமென மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திரு.ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
தொடர்ந்து, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 20 நபர்களுக்கு அடையாள அட்டைகளை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி, வருங்கால வைப்பு நிதி அலுவலக உதவி ஆணையர் சாஜி, குன்றக்குடி வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மைய முதல்வர் செந்தூர்குமரன், அமலாக்க அலுவலர் சுந்தன், கூட்டுறவு விற்பனை பண்டகச் சாலை சங்கத்தலைவர் ஆனந்தன், கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் சசிக்குமார், ராஜா, பலராமன், பாண்டி, ஜெயப்பிரகாஷ், மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் அமைப்பு சாரா தொழிலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.3,000 சரிவு
28 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 சரிந்து விற்பனையானது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி பயணம்
28 Oct 2025சென்னை : அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி செல்கிறார். பின்னர் நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துக்கொள்கிறார்.
-
த.வெ.க. புதிய நிர்வாகக்குழு அறிவிப்பு
28 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் விஜய்யை நேரில் சந்தித்த பின் தகவல்
28 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர்.
-
முன்னாள் நீதிபதி தலைமையில் 8-வது ஊதியக்குழு அமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
28 Oct 2025புதுதில்லி : சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்படுவது மற்றும் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி த
-
சென்னையில் இன்று முதல் மழை குறையும்
28 Oct 2025சென்னை : சென்னையில் இன்று முதல் மழை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
-
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு
28 Oct 2025சென்னை : சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
-
களப்பணியில் வெல்ல வேண்டிய தருணம் இது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Oct 2025சென்னை : களப்பணியில் தி.மு.க. தொண்டர்களை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நெல் கொள்முதல் விவகாரம்: தமிழக அரசுக்கு விஜய் கேள்வி
28 Oct 2025சென்னை : உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள த.வெ.க.
-
ஓரணியில் நின்று வாக்குரிமை பறிப்பை நாம் தடுப்போம் : துணை முதல்வர் உதயநிதி பதிவு
28 Oct 2025சென்னை : வரும் 2026 தேர்தலில் 68,000 வாக்குச்சாவடியிலும் வெற்றி என்ற புதிய வரலாறு படைப்போம் என தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஓரணியில் நின்று அநியாய வாக்
-
பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
28 Oct 2025பாட்னா : பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: கவனிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
28 Oct 2025சென்னை : தமிழகத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ என்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குவதால் 6 முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டி உள்ளது.
-
தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்
28 Oct 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
-
நீடாமங்கலத்தில் மத்தியக் குழு ஆய்வு: நெல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை
28 Oct 2025நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் நேற்று (அக்.
-
மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது
28 Oct 2025சென்னை : மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது.
-
6 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி
28 Oct 2025தருமபுரி : காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக சரிந்துள்ளதால், 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பய
-
குகேஷ் தரமான பதிலடி
28 Oct 2025அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
-
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிக்கு அனுமதியா? - தமிழ்நாடு அரசு விளக்கம்
28 Oct 2025சென்னை : பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
28 Oct 2025சென்னை : திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
-
இரு மாநிலங்களில் வாக்காளர் அட்டை: பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ்
28 Oct 2025பாட்னா : இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் விவகாரத்தில் பிரசாந்த் கிஷோர் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
6.1 ரிக்டர் அளவில் துருக்கியில் நிலநடுக்கம்
28 Oct 2025அங்காரா : துருக்கி நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மேற்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு: தமிழ்நாடு அரசு தகவல்
28 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை எதிரொலி காரணமாக 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
28 Oct 2025புதுடெல்லி : தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை: ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து சூர்யகுமார் தகவல்
28 Oct 2025சிட்னி : ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் தற்போது உடல் நிலை சீராக உள்ளதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்
-
உடான் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானங்களை தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்
28 Oct 2025மாஸ்கோ : இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.


