முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு - ஆய்வறிக்கையில் தகவல்

புதன்கிழமை, 6 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இந்தியப் பொருளாதாரச் சூழலை ஆய்வு செய்யும் சி.எம்.ஐ.இ. (CMIE) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் சென்ற பிப்ரவரி மாதத்தில் வேலைவாய்ப்பின்மை 7.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2018-ம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை 5.9 சதவிகிதமாக இருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

1 கோடி பேர் வேலையிழப்பு

நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி நிலவரப்படி 40 கோடியாக இருந்ததாகவும், ஆனால் 2018 பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 40 கோடியே 60 லட்சமாக இருந்ததாகவும் சி.எம்.ஐ.இ. ஆய்வு தெரிவிக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமலாக்கம் உள்ளிட்டவைகளால் 2018-ம் ஆண்டில் சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்திருப்பதாகவும் அந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து