முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் ஜெகன்மோகன்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : ஆந்திராவில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டார்.

ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பின்னர் அவரது மகனான ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி தலைவராக தொண்டர்களை வழிநடத்தி வருகிறார்.

ஆந்திராவில் ஏப்ரல் 11-ம் தேதியன்று சட்டசபை மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஆந்திராவில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று வெளியிட்டுள்ளார்.

தற்போது கடப்பா மாநிலத்தில் உள்ள புலிவேந்துவல் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி வரும் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். குப்பம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து சந்திரமவுலி என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனத் தலைவருமான டகுபதி வெங்கடேஸ்வர ராவ் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள புர்ச்சூர் சட்டசபை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் 43 பேருக்கு இந்தமுறை சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 41 தொகுதிகளும், சிறுபான்மையினத்தவர்களுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து