முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை : மதுரையில் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு மதுரையில் உள்ள ஒரு நாளிதழில் வெளியான கருத்துக்கணிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து ஒரு தரப்பை சேர்ந்த ஆதரவாளர்கள் பொங்கி எழுந்தனர்.

இதையடுத்து மதுரையில் உள்ள அந்த பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதோடு, அலுவலகத்திற்கும் தீ வைக்கப்பட்டது. இதில் அங்கு பணிபுரிந்த 3 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேரை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது.

தலா ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடு

இதையடுத்து சி.பி.ஐ. தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேரை விடுதலை செய்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட் மதுரை கிளை நேற்று ரத்து செய்தது. மேலும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இச்சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கவும் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து