முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: 28-ம் தேதி விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட் வரும் 28-ம் தேதி விசாரிக்கிறது.

18 தொகுதிகளுக்கு...

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அத்துடன், காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், தேர்தல் வழக்குகளை காரணம் காட்டி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

மனு தாக்கல்...

தற்போது இந்த மூன்று தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்து விட்டதால், தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை. இதையடுத்து 3 தொகுதிகளிலும், ஏப்ரல் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தக் கோரி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கை வரும் 28-ம் தேதி (வியாழக்கிழமை) விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து