முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் இராட்சச வண்ண பலூனை தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் வானில் பறக்க விட்டார்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2019      தேனி
Image Unavailable

 தேனி,- தேனி பழைய பேருந்து நிலையம், நேரு சிலை அருகில் 33.தேனி பாராளுமன்ற பொதுத்தேர்தல் - 2019 மற்றும் 198.ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி மற்றும் 199.பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு நூறு சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்திடும் பொருட்டு பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் இராட்சச வண்ண பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,  வானில் பறக்க விட்டார்.

பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது,

இத்தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்திடும் பொருட்டு பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிப்பகுதிகளில் வாக்காளர் பிராச்சார வாகனம், மகளிர் சுய உதவிக்குழுவினரின் ரங்கோலி, மெஹந்தி திருவிழா, மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைத்தல், அஞ்சல் வில்லை வெளியிடுதல், வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரின் கடிதம் அனுப்புதல், வாகனங்களில் விழிப்புணர்வு பேரணி, எரிவாயு சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுதல், ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள், கல்லூரி மாணவர்களின் குடயளா ஆழடிஇ வணிக நிறுவன பைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் வெளியிடுதல், பெட்ரோல் விற்பனை நிலைய பணியாளர்களுக்கு விழிப்புணர்வு டீ சர்ட் வழங்குதல், மாணவ, மாணவியர்களின் உருவங்கள் அடங்கிய விழிப்புணர்வு மாணவ, மாணவியர்களின் மனித சங்கிலி, கையெழுத்து இயக்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்பு ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு எய்திட தேவையான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் அனைவரும் வாக்குப்பதிவு செய்திட முன்வரவேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வாக்களிப்பதற்கு தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 அதனடிப்படையில், பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியனின் முதல் பெருமை, 100 சதவீதம் ஓட்டு இந்தியர்களின் பெருமை, தேர்தல் நாள் - 2019-ஏப்ரல்-18, அனைவரும் வாக்களிப்பீர், 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியனின் முதல் பெருமை போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய இராட்சச வண்ண பலூன் பறக்க விடப்பட்டது.  50 அடி விட்டமும், 15 அடி உயரமும் கொண்ட இந்த இராட்சச பலூன் தேர்தல் முடியும் வரை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் வானில் பறந்து கொண்டிருக்கும் என மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,   தெரிவித்தார்.

 இந்நிகழ்வின் போது,  உதவி ஆட்சியர் (பயிற்சி) சி.தினேஷ்குமார்,  மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து