முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின் வாக்குச் சீட்டு முறை 100 சதவீதம் நடைமுறைக்கு வரும்: சித்தராமையா

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

மைசூர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 100 சதவீதம் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும் என கர்நாடகா மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா உறுதியளித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் வரும்18 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பாராளுமன்ற தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வர்  சித்தராமையா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உறுதியானவை அல்ல. வி.வி.பேடுகளிலும் கோளாறுகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. நாட்டின் பல்வேறு கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகார் கொடுத்துள்ளனர். ஆனால், தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. நெதர்லாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை கைவிட்டு, பழைய வாக்குச்சீட்டு முறைக்கே மீண்டும் மாறி விட்டன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறை 100 சதவீதம் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து