எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி, தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து தேனி மாவட்டம் கம்பம், சின்னமனூர் போடிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் இறுதி கட்ட பிரச்சாரமாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். இப்பிரச்சாரத்தின் போது தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது,
மத்தியில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்தது. ஆனால் நாட்டு மக்களுக்கு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்பதற்காக தமிழக மக்கள் பல லட்சம் பேர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய போது பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று நான் முதலமைச்சராக இருந்த போது வேண்டுகோள் விடுத்தேன். இதனையடுத்து உடனடியாக இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஒரே நாளில் நான்கு துறைகளிலும் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை செய்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு மூல காரணமாய் இருந்தவர் நரேந்திர மோடி.
மேலும் தமிழகத்தில் தாய்மார்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அம்மா செய்திருந்தார். அவர் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளின் பணி சுமையை குறைப்பதற்காக இலவச மிக்சி கிரைண்டர் மின் விசிறி போன்ற அனைத்து பொருட்களும் தமிழக அரசால் 5 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அம்மா இருந்த போது பொங்கலுக்கு அனைவரும் சர்க்கரை பொங்கல் வைத்து சாப்பிடும் விதமாக பச்சரிசி வெல்லம் போன்றவை வழங்கப்பட்டது தற்போது அவற்றுடன் சேர்த்து மக்கள் அனைவரும் சந்தோசமாக பொங்கல் திருவிழாவை கொண்டாட வேண்டும் என்பதற்காக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அம்மா இருந்த பொழுது கொண்டு வந்த எந்த திட்டத்தையும் குறைக்கவில்லை, விரிவுபடுத்தப்பட்டுதான் வருகிறது. மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் மக்களுக்கு தமிழக அரசால் 2000 ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு கொடுக்க முன் வருவதற்குள் தி.மு.க.வினர் அதனை தடுக்கும் விதமாக நீதிமன்றம் சென்று நிறுத்தி விட்டனர். உறுதியாக தேர்தல் முடிந்தவுடன் நீதிமன்றத்தில் இருக்கும் தடையை விலக்கி ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும் நாங்கள் சரிவர வேலை செய்கிறோமா என்று மேலிருந்து எங்களை அம்மா கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.
அதனால் நாங்கள் பயந்து கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதை ஸ்டாலின் இந்தத் தேர்தலுடன் அ.தி.மு.க. காணாமல் போய் விடும் என்று பேசி வருகிறார். 1972-ல் எம்ஜிஆர் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு வந்த வேதனைகள் சோதனைகள் அனைத்தையும் தாங்கி இன்று ஒன்றரை கோடிக்கு மேல் தூய தொண்டர்களை கொண்ட இயக்கமாக உள்ளது. எந்த ஒரு கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக அம்மா உருவாக்கி வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஸ்டாலின் கூறுகிறார், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தமிழ்நாட்டையே தீ வைத்துக் கொளுத்தி விடுவார்கள் என்கிறார். அதற்கு நாங்கள் என்ன தீப்பந்தத்துடனா அலைந்து கொண்டிருக்கிறோம். மாமன், மச்சான் சண்டையில் மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை தீ வைத்துக் கொளுத்தி 3 பேர் இறந்ததற்கு தி.மு.க. வே காரணம். அதற்கு தீர்ப்பு காலம் தாழ்த்தி வந்தாலும் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். இன்றைக்கும் ஸ்டாலின் எதிர்க்கட்சி தான். ஆனால் வன்முறையை கைவிடவில்லை.
சென்னையில் பிரியாணி சாப்பிட்டு விட்டு அந்தக் கட்சியினர் பணம் கொடுப்பதில்லை. தற்போது பணம் கொடுத்தால் மட்டும் தான் அவர்களை உள்ளே நுழைய விடும் அவலம் அந்த கட்சியினருக்கு தற்போது நிகழ்ந்து வருகிறது. எதிர்க்கட்சியில் இருக்கும் போதே இந்த ஒரு நிலை என்றால் ஆளுங்கட்சியாக அவர்கள் வந்தால் தமிழ்நாட்டை என்ன பாடு படுத்துவார்கள். மேலும் இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்களுக்கு நோன்புக் கஞ்சிக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது. மேலும் மூவாயிரத்திலிருந்து 4000 பேர் வரை ஹஜ் பயணத்திற்கு மாநில நிதியிலிருந்து மானியம் வழங்கப்படுகிறது. கிறிஸ்துவ பெருமக்கள் ஜெருசலம் செல்வதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இப்படி அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்ல பல திட்டங்களை வழங்கி வருவது இந்த அரசுதான். ஆகவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமாருக்கு தங்களது வாக்குகளை வழங்க வேண்டும். உங்களுக்காக அவர் உழைத்திடுவார். இந்த இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மற்றும் நகர செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
சர்வதேச அளவில் ஒரே நாளில் தங்கம் -வெள்ளி விலை வீழ்ச்சி
22 Oct 2025மும்பை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 6.3% சரிந்தது. இதேபோல் ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி விலையும் நேற்று 8.7% சரிவை சந்தித்தது.
-
பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனாதிபதி முர்மு சாமி தரிசனம்
22 Oct 2025திருவனந்தபுரம், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கு மேல் சரிந்த தங்கம் விலை
22 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையான ந
-
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
22 Oct 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.
-
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
22 Oct 2025சென்னை : வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையால் புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.
-
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக கரையை கடக்கும் 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
22 Oct 2025சென்னை, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என்றும் இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே வடதமிழ்நாடு – புத
-
லோக்பால் உறுப்பினர்களுக்கு ரூ. 5 கோடியில் சொகுசு கார்கள் வாங்க டெண்டர்
22 Oct 2025மும்பை : ஊழலை ஒழிக்கும் லோக்பால் உறுப்பினர்களுக்கு சொகுசு கார் வாங்கி கொடுப்பதா என சரத்பவார் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
22 Oct 2025திருவாரூர் : கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
-
உங்களது உழைப்பு ஆச்சரியப்படுத்துகிறது: மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி
22 Oct 2025சென்னை : உங்களது உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது என ரஜினி தெரிவித்ததாக மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.
-
தங்க நகைகளை வீட்டில் எவ்வளவு வைக்கலாம்..? வெளியானது புதிய தகவல்கள்
22 Oct 2025புதுடெல்லி, வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்திருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறப்பு
22 Oct 2025சென்னை : அடையாறு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்யுமா? - அடிலெய்டில் இன்று 2-வது போட்டியில் மோதல்
22 Oct 2025அடிலெய்டு : ஆஸி.,க்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்யுமா?
-
பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு
22 Oct 2025சென்னை : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
-
காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்
22 Oct 2025சென்னை, காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கடலூரில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் பலி: அமைச்சர் ஆறுதல்
22 Oct 2025கடலூர் : கடலூர் அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அசோதை. இவர்களது மகள் ஜெயா.
-
நெல் மூட்டைகள் தேங்க மத்திய அரசே காரணம்: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
22 Oct 2025தஞ்சாவூர், விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல்
-
கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
22 Oct 2025கரூர் : கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் திடீர் பரபரப்பு
22 Oct 2025பத்தனம்திட்டா : ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
22 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி காவிரி - கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
22 Oct 2025திருச்சி : காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
சோனி, எக்கோ ரெக்கார்டிங் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா ஐகோர்ட்டில் மனு
22 Oct 2025சென்னை : சோனி மியூசிக் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பிரபல இசையமைப்பாள
-
அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
22 Oct 2025சென்னை : அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு: அனைத்து மாவட்டங்களிலும் எச்சரிக்கையாக இருக்கிறோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
22 Oct 2025சென்னை, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி, அனைத்து மாவட்டங்கள