எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் சட்டசபை தொகுதிகளுக்கு மே மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த தேர்தலையொட்டி வரும் 22-ம் அதாவது நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் பணி தொடங்குகிறது.
ஒரே கட்ட தேர்தல்...
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த 11-ம் தேதி முதல் மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த 18-ம் தேதியன்று வேலூர் தொகுதி நீங்கலாக 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் 2-ம் கட்டமாக தேர்தல் நடந்தது. மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும் அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சராசரியாக 71.87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 18 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சராசரியாக 75.37 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
மே 19-ம் தேதி...
காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் சில கட்சிகள் அந்த 4 தொகுதிகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற மே மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
மனுத்தாக்கல் ஆரம்பம்...
இதையடுத்து இந்த 4 தொகுதிகளிலும் வரும் 22-ம் தேதி அதாவது நாளை வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. 29-ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை 30-ம் தேதி நடக்கிறது. அதை தொடர்ந்து மே மாதம் 2-ம் தேதி மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
பிரசாரம் சூடு பிடிக்கும்...
இந்த 4 தொகுதிக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டனர். அ.தி.மு.க.வில் 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான விருப்பமனு அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று பெறப்படுகிறது. இந்த 4 தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் களம் இறங்குகின்றன. அதன் பிறகு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கும்.
மே 23-ம் தேதி முடிவுகள்...
மே மாதம் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் 23-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அன்றைய தினம் இந்த 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் முடிவுகளும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
4 தொகுதி இடைத்தேர்தல்
1) மனுத்தாக்கல் ஆரம்பம் - ஏப்ரல் 22-ம் தேதி.
2) மனுத்தாக்கலுக்கு கடைசி நாள் - ஏப்ரல் 29-ம் தேதி.
3) மனுக்கள் மீது பரிசீலனை - ஏப்ரல் 30-ம் தேதி.
4) திரும்ப பெற கடைசி நாள் - மே 2-ம் தேதி.
5) இறுதி வேட்பாளர் பட்டியல் - மே 2-ம் தேதி.
4) தேர்தல் முடிவு அறிவிப்பு - மே 23-ம் தேதி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026


