முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 4 இந்தியர்கள் பலி

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 4 இந்தியர்கள் பலியானார்கள்.

இலங்கை தலைநகர் கொழும்பு, நிகாம்போ, மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அவர்களில் 35 பேர் வெளிநாட்டினர் என்று தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, பலியான வெளிநாட்டினரில் 4 பேர் இந்தியர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது.

கொழும்பு குண்டு வெடிப்புகளில் பலியானவர்களின் உடல்கள், கொழும்பில் உள்ள தேசிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த ஆஸ்பத்திரியில் இருந்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. பலியான இந்தியர்களின் பெயர்கள் லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ், ரெஜினா ஆகும். இவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணி நடந்து வருகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 இந்தியர்கள் பலியான செய்தியை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜும் உறுதி செய்துள்ளார். குண்டு வெடிப்பில் பலியான ரெஜினா கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து