முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் வாக்களிக்க சென்ற 3 முதியவர்கள் பலி

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

Source: provided

 திருவனந்தபுரம் : கேரளா மாநிலத்தில் நேற்று  நடைபெற்றம் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த 3 முதியவர்கள் சுருண்டு விழுந்து மரணம் அடைந்தனர்.  

பாராளுமன்ற தேர்தலின் மூன்றாவது கட்டம் நேற்று நடைபெற்றது.. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு நேற்று  தேர்தல் நடைபெற்றது.

பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களது வாக்கினை பதிவுசெய்தனர்.
இந்நிலையில், கேரளா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த இரு முதியவர்கள் சுருண்டு விழுந்து மரணம் அடைந்தனர்.

கேரளா மாநிலம் வடகரா தொகுதியில் விஜயி (65), என்ற மூதாட்டி சுருண்டு விழுந்து இறந்தார்.

இதேபோல், வடசேரிக்கரா தொகுதியில் பாப்பச்சன் (80), என்ற முதியவர் வாக்களிக்கும் இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். மேலும், இதே தொகுதியில் வேணுகோபால மரார் (72), என்ற முதியவரும் மயக்கமடைந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து