எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவில்பட்டி அருகே தோல் நோய்களை போக்கும் அருள்மிகு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி சமேத ஸ்ரீ சங்கரேஸ்வரி அம்மாள் திருக்கோயில் ஸ்தல வரலாறை இங்கே காண்போம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள வீரவாஞ்சி நகரில் புற்றுக்கோயிலுடன் அமைந்துள்ளது அருள்மிகு சங்கரேஸ்வரி அம்பாள் சமேத சங்கரகலிங்க சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் வழங்கப்படும் புற்று மண் பிரசாதம் அனைத்து விதமான தோல் நோய்களையும் தீர்ப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கின்றனர். பல வருடங்களுக்கு முன்பு இப்போது கோயில் அமைந்திருக்கும் இடத்திருக்கும் இடத்தில் வீடு கட்டுவதற்காகச் செடி கொடிகளை அப்புறப்படுத்திய போது ஒரு வேப்ப மரத்தின் அடியில் நல்ல பாம்பு படமெடுத்து நிற்க, அதற்கு மேலும் பணிகளைத் தொடராமல் அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டார்களாம். அதன் பிறகு அந்த வேப்ப மரத்தின் அடியில் ஒரு புற்று வளரத் தொடங்கி உள்ளது. அதே நேரம் அந்தப் பகுதியில் இருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தோல் அலர்ஜி ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டனர்.
இந்த நிலையில் அந்த ஊரைச் சோடந்த ஒரு பெண்ணின் கனவில் தோன்றிய அம்மன், வேப்ப மரத்தின் அடியில் வளர்ந்திருக்கும் புற்றின் மண்ணை எடுத்துப் பூசினால் தோல் நோய்கள் குணமாகும் என்று அருள் வாக்கு கூறினாளாம். அதன்படியே, அலர்ஜியால் பாதிக்கப்பட்ட மக்கள் அம்மனை பிரார்த்தனை செய்து புற்று மண்ணை எடுத்து பூசிக்கொண்டதும், அவர்களின் தோல் நோய் குணமானது.
அதைத் தொடர்ந்து ஊர் மக்கள் அப்பகுதியில் வெப்பத்தை தணிப்பதற்காக நிறைய வேப்ப மரங்களை நடடு வளர்த்தார்கள். அத்துடன், இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் புற்றின் அருகில் விளக்கேற்றி பூஜை செய்து வந்தனர். இப்படி, தங்களுக்குக் காட்சி தந்த பாம்மை, சிவன் அம்சமாகவும் வேப்ப மரத்தைப் பார்வதியின் அம்சமாகவும் கருதி வழிபட்டவர்கள், நாளடைவில் வேப்ப மரத்தடி புற்று அம்மனுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, புற்றின் அருகிலேயே கோயில் கட்டி, அருள்மிகு சங்கரேஸ்வரி அம்மன் - அருள்மிகு சங்கரலிங்க சுவாமியை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார்கள்.
கிழக்கு நோக்கியபடி தனித்தனிச் சன்னதிகளில் அருள் பாலித்து வருகின்றனர் சுவாமியும் அம்பாளும். மேலும், வள்ளி - தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண முருகப் பெருமான், கன்னி மூலையில் அருளும் ஸ்ரீ கோடி சக்தி விநாயகர், ஸ்ரீ துர்கை, ஸ்ரீ தட்சிணா மூர்த்தி, ஸ்ரீகால பைரவர் ஆகியோரையும் இந்தக் கோயிலில் தரிசிக்கலாம். மட்டுமின்றி, நாகர் சிலைகளுடன் சப்த கன்னியரும் இங்கே காட்சி தருகின்றனர்.
மரத்தடியில் உள்ள புற்றுக்கு ஆரம்பத்தில் இருந்தே பால் ஊற்றி வருவதால், இங்குள்ள வேம்ப மரத்தைப் பாலாலேயே வளர்ந்த மரம் என்று சிறப்பித்துச் சொல்கிறார்கள் உள்ளுர் பக்தர்கள். சுங்கரன் கோவிலைப் போலவே இந்தக் கோயிலிலும் ஆடித் தபசு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடித் தபசு திருவிழாவின் 11-ம் நாளன்று ஸ்ரீசங்கரலிங்க சுவாமியும், ஸ்ரீசங்கரேஸ்வரி அம்மனும் ஒருசேர ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
இந்த வைபவத்தில் கலந்து கொண்டு அம்பாளையும், சுவாமியையும் தரிசித்து வழிபட்டுச் சென்றால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்தத் தினத்தில் குழந்தை பாக்கியத்துக்காக இங்கு நடைபெறும் பிரார்த்தனை விசேஷமானது. தாம்பாளத் தட்டு ஒன்றில் மஞ்சள் பொடி, குங்குமம், மஞ்சள் வண்ணப் பட்டு வஸ்திரம், பசும்பால், முட்டை, பழம், வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை வைத்து தம்பதியரின் பெயரைச் சங்கல்பம் செய்து, அம்பாளிடம் வைத்து பூஜை செய்கின்றனர். பிறகு மஞ்சள் நிற பட்டுத் துணியில் எலுமிச்சைப் பழத்தை வைத்து முடிந்து, அம்பாள் இடையில் கட்டி, பூமாலை சாத்தி அர்ச்சனை செய்து தம்பதியரிடமே திரும்பக் கொடுப்பார்கள்.
தம்பதியர் புற்று சந்நிதிக்குச் சென்று, புற்றின் அருகில் உள்ள ஐந்து தலை ராகுவின் மேல் மஞ்சள் பொடியும் ஒற்றைத்தலை கேதுவின் மேல் குங்குமமும் தூவி, புற்றில் பசும்பால் ஊற்றி வழிபட வேண்டும். பிறகு, அம்பாள் சந்நிதியில் கொடுக்கப்பட்ட பட்டுத்துணியில் எழுமிச்சைப் பழத்தை வைத்து முடிந்து, அம்பாள் அடையில் கட்டி, பூமாலை சாத்தி அர்ச்சனை செய்து தம்பதியரிடமே திரும்பக் கொடுப்பார்கள்
தம்பதியர் புற்று சந்நிதிக்குச் சென்று, புற்றின் அருகில் உள்ள ஐந்து தலை ராகுவின் மேல் மஞ்சள் பொடியும் ஒற்றைத் தலை கேதுவின் மீது குங்குமமும் தூவி, புற்றில் பசும்பால் ஊற்றி வழிபட வேண்டும். பிறகு, அம்பாள் சந்தியில் கொடுக்கப்பட்ட எலுமிச்சை பழம் முடிந்த பட்டுத் துணியை மனைவி எடுத்து கணவரிடம் கொடுக்க, அவர் அதை வேப்ப மரத்தில் தொட்டில் போல் கட்ட வேண்டும். தொடர்ந்து, இருவருமாகச் சேர்ந்து அந்தத் தொட்டிலை மூன்று முறை ஆட்டி விட்டு, புற்றை மூன்று முறை வலம் வந்து வழிபட வேண்டும். இதனால், மரத்தில் தொட்டில் ஆடுவது போலவே விரைவில் வீட்டிலும் தொட்டில் ஆடும் என்று பக்தர்கள் நம்பிக்கையாகக் கூறுகின்றனர்.
ஆடித் தபசு நாளில் மட்டுமின்றி, சனிக்கிழமை தவிர மற்ற நாள்களிலும் இந்த பிரார்த்தனை செய்யப்படுகிறது. ஆனால், வஸ்திரத்தின் நிறம் மாறுபடும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாள்களில் சிவப்பு வண்ணத்திலும், புதனன்று பச்சை, வியாழக் கிழமை மஞ்சள், வெள்ளிக் கிழமை சந்தக நிறம் என்று அந்தந்த கிழமைக்குரிய நிறத்தில் வஸ்திரம் கட்ட வேண்டும் என்பது ஐதீகம்.
அம்பாள் குழந்தை வரம் அருள்பவள் உன்றால், அவளின் செல்வப் பிள்ளையான முருகப்பெருமானோ கல்யாண வரம் அருளும் மூர்த்தியாகத் திகழ்கிறார். செவ்வாய்க் கிழமையில் முருகப் பெருமானுக்குச் சந்தன நிற வேஷ்டி வள்ளிக்குப் பச்சை நிறப் புடவை, தெய்வானைக்குச் சிவப்பு நிறப் புடவை சாத்தி, மூவருக்கும் செவ்வரளி மாலை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், உடைத்த துவரம்பருப்பை ஒரு வாழை இலையில் பரப்பி, அதன் மேல் தேங்னாய் மூடிகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஏழு வாரங்கள் இங்கு வந்த வழிபட்டு, நிறைவாக ஏழு சுமங்கலிகளுக்கு வெற்றிலைப் பாக்குடன் மஞசள், குங்குமம் போன்ற மங்கலப் பொருள்களைக் கொடுத்து அவர்களது ஆசியைப் பெற வேண்டும். நிறைந்த பக்தியோடு இந்த வழிபாட்டை செய்தால் விரைவில் மணமாலை தோள்சேரும். அதேபோல், அவரவர் ஜன்ம நட்சத்திரத்தன்று சங்கரலிங்க சுவாமிக்கு மயில்கண் வேஷ்டி அணிவித்து, நெய் தீபம் ஏற்றி, வில்வார்ச்சனை செய்து வழிபட்டால் காரியத் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.
தகவல்- சுப்பிரமணி அய்யர், அர்ச்சகர் சங்கரேஸ்வரி திருகோயில், வீரவாஞ்சிநகர் 3-வது தெரு, கோவில்பட்டி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.