முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவாலியர் ரயில் நிலைய கேன்டீனில் திடீர் தீ விபத்து

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

குவாலியர், குவாலியர் ரயில் நிலையத்தில் உள்ள கேன்டீனில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் ரயில் நிலையத்தில் உள்ள கேன்டீனில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். கேன்டீன் அருகே உள்ள பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகளும் வெளியேறினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.  தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், ரயில் நிலையத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து