முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரக்ஸிட் ஒப்பந்த விவகாரம்: மீண்டும் வரைவு மசோதா தாக்கல் செய்தார் தெரசாமே

புதன்கிழமை, 22 மே 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : பிரெக்ஸிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக பிரதமர் தெரசா மே மீண்டும் ஒரு வரைவு மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற அந்த நாட்டு மக்கள் வாக்களித்தனர். பிரிட்டன் வெளியேற நான்கு ஆண்டு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் 29-ம் தேதியுடன் இந்த கால அவகாசம் முடிவுக்கு வந்தது. ஆனால் அதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவு மசோதாவை மூன்று முறை தொடர்ந்து அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோற்கடித்து விட்டனர்.

தற்போது 4-வது முறையாக வரைவு மசோதாவை தெரசா மே தாக்கல் செய்துள்ளார். இந்த முறை கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் கட்சி எம்பிகள் ஆதரவளிக்க வேண்டும் என்று தெரசா மே கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ஜெர்மி கார்பின் அதனை ஏற்க மறுத்து விட்டார். பிரிட்டனின் எதிர்க்கால நலனை பாதுகாக்கும் வகையில் ஐரோப்பிய யூனியனுடன் ஒரு நிரந்த ஒப்பந்தத்துடன் வெளியேற வேண்டும் என்பது பெரும்பாலான எம்.பி.க்களின் கோரிக்கையாகும். இந்த நிலையில் கடைசி கால அவகாசமும் முடிவடைந்து விட்டதால் மீண்டும் கால அவகாசம் கேட்க தேரசா மே முடிவு செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து