எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் 76 பெண் எம்.பி.க்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக செல்ல உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 716 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களில் பா.ஜ.க. சார்பில் 47 பேரும், காங்கிரஸ் சார்பில் 54 பேரும், பகுஜன் சார்பில் 24 பேரும் போட்டியிட்டனர். இந்த பெண் வேட்பாளர்களில் பா.ஜ.க.வில் பிரக்யா சாத்வி, ஸ்மிருதி இராணி உட்பட 34 பேரும், காங்கிரஸ் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோதிமணி, மற்றும் சோனியா காந்தி ஆகியோரும், பகுஜன் சமாஜ் சார்பில் ஒரு வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் சுயட்சையாக நின்ற 222 பெண் வேட்பாளர்களில் ஒருவர் மட்டும் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ஏற்கனவே எம்.பி.யாக இருந்த 41 பேர்களில் சோனியா காந்தி, ஹேம மாலினி உட்பட 28 பேர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்ற கனிமொழி, தென்சென்னை தொகுதியில் வெற்றி பெற்ற தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரும் பாராளுமன்றத்துக்கு செல்ல உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


