எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு, உளவுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்தும் ஈஸ்டர் தினத்தன்று 250 உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதலை தடுக்க இலங்கை அதிபர் தவறி விட்டதாக பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் ஐ.ஜி. குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த பிப்ரவரி மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின்மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்விவகாரத்தில் ஒழுங்காக கடமையாற்ற தவறியதாக இலங்கை காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ( ஐ.ஜி.) புஜித் ஜெயசுந்தரா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் ஐ.ஜி. புஜித் ஜெயசுந்தரா இலங்கை உச்சநீதி மன்றத்தில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.
தன்னை பணிநீக்கம் செய்து கட்டாய விடுப்பில் வைத்திருப்பது அநீதியானது என உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த 20 பக்கங்களை கொண்ட மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இதுபோன்ற மிகப்பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை முன்கூட்டியே எச்சரித்திருந்தது. ஆனால், அந்த தகவலை இலங்கை அரசின் உளவுத்துறை தலைவர் நிலாந்தா ஜெயவர்த்தனே அதிபருக்கு நேரடியாக தெரிவிக்கவில்லை. தனக்கு கிடைத்த தகவலை போலீசாரிடம் தெரிவித்து உரிய தற்காப்பு நடவடிக்கை எடுக்க தவறியதுடன் காவல் துறையின் தலைவர் என்ற முறையில் நான் தெரிவித்த சில தகவல்களையும் அவர் பெரிதாக பொருட்படுத்தவில்லை.
மேலும், இலங்கை உளவுத்துறைக்கும் ராணுவம் மற்றும் காவல்துறைக்கும் இடையிலான தகவல் தொடர்புகளில் மிகப்பெரிய குறைபாடு இருந்துள்ளது. இதற்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாதான் முக்கிய காரணம்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டங்களில் அதிபர் கலந்து கொள்ளவில்லை. எனவே, ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய பொறுப்பு அவரையே சேரும் என தனது மனுவில் முன்னாள் ஐ.ஜி. புஜித் ஜெயசுந்தரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


