முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. முதல் கூட்டத் தொடரில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா மீண்டும் தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : புதிய மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மருத்துவ கல்வியில் ஏராளமான சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா, கடந்த 2017-ம் ஆண்டு பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிலைக்குழு ஆய்வுக்கு பிறகு சில திருத்தங்களும் செய்யப்பட்டன. ஆனால், மக்களவை கலைக்கப்பட்டதால், அந்த மசோதா காலாவதியாகி விட்டது.

இந்நிலையில், புதிய மக்களவையின் முதல் கூட்டத்தொடரிலேயே, தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு மசோதா, மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு, மத்திய மந்திரிசபையின் ஒப்புதலையும் பெற்று விட்டு, மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. மருத்துவ கல்வியை ஒழுங்குபடுத்தும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்கள், இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து