முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமன் போரில் 7,500 சிறுவர்கள் பலி: ஐ.நா. அறிக்கையில் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

ஏமனில் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 7,500-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்ததாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஏமன் உள்நாட்டுப் போரில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதியிலிருந்து, 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை சிறுவர்களுக்கு எதிராக 11,779 குற்றச் செயல்கள் நடைபெற்றுள்ளன.

 இந்தச் செயல்களில், 7,500-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்தனர். இது தவிர, சிறுவர்களை போரில் ஈடுபடுத்துவது, எதிர்க் குழுவினருடன் தொடர்புடைய சிறுவர்களைக் கடத்திச் செல்வது போன்ற குற்றங்களும் நடைபெற்றுள்ளன.

2014-ம் ஆண்டு தொடங்கிய இந்த உள்நாட்டுப் போரில், அப்பாவிப் பொதுமக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏமன் போரில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை மிகத் துல்லியமாக கண்காணிப்பது இயலாது என்பதால், இந்த புள்ளி விவரங்களை விட உண்மை நிலவரம் மிகவும் மோசமானதாக இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து