முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை சற்று தணிந்தது: மும்பையில் இயல்பு வாழ்க்கை திரும்பியது

புதன்கிழமை, 3 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : மகராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை நேற்று சற்று தணிந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கியது.

மகராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் தாமதமாக தொடங்கிய பருவமழை நகரை புரட்டி எடுத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களாக இரவு, பகலாக விடாமல் கொட்டி தீர்த்தது. இதனால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளன. சாலை, ரெயில், விமான போக்குவரத்தும் முடங்கியது. பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மும்பையில் நேற்று மழை சற்று தணிந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்பியது.  சாலைகளில் தேங்கியிருந்த வெள்ளம் வடியத் தொடங்கியது. வாகன போக்குவரத்தும் தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்த போதிலும், நகரின் எந்த பகுதியிலும் பெரிய அளவில் தண்ணீர் தேங்கவில்லை என்றும், புறநகர் ரெயில்கள் மற்றும் பெஸ்ட் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெரும்பாலான பெஸ்ட் பேருந்துகள் இயக்கப்படுவதால் போக்குவரத்து சீராகி உள்ளது. கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருப்பதால், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நேற்று குறைந்த அளவில் புறநகர் ரெயில்கள் இயக்கப்படுவதாக மத்திய ரெயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து