எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மக்காச்சோளத்தைப் பயிரிட்டு அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 93 ஆயிரத்து 424 விவசாயிகளின் துயர் துடைக்க மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் இறவைப் பயிருக்கு ஹெக்டேருக்கு 13,500 ரூபாயும், மானாவாரிப் பயிருக்கு ஹெக்டேருக்கு 7,410 ரூபாயும் என்ற விகிதத்தில், மொத்தம் 186 கோடியே 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக, நமது மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தியில் மக்காச்சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்காச்சோளம் பயிரிடுபவர்களில் 80 சதவீதத்திற்கும் மேல் சிறு, குறு விவசாயிகள் தான். ஆடி, புரட்டாசி மற்றும் சித்திரைப் பட்டங்களில் 80 சதவீதம் மானாவாரியாகவும், எஞ்சியுள்ளவை இறவைப் பயிராகவும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.5 லட்சம் ஹெக்டேரில் மக்காச்சோளம் தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படுகிறது. வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மாறிவரும் பருவநிலை காரணமாக, அமெரிக்காவில் மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் அமெரிக்கன் படைப்புழு அமெரிக்காவில் இருந்து 2016-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி 2018-ம் ஆண்டு நமது நாட்டிலும் பரவியது. தற்போது, நம் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், சீனா, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளிலும் பரவி குறிப்பாக மக்காச்சோளப் பயிரினை தாக்கி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்கன் படைப்புழு, கடந்த 2018-ம் ஆண்டில் கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் நமது மாநிலத்திலும் மக்காச்சோளப் பயிரைத் தாக்கியது. இப்புழுவின் தாக்குதல், மக்காச்சோளப் பயிரின் அனைத்து நிலைகளிலும் விரைவில் பரவி பெருமளவு சேதத்தை ஏற்படுத்தும் தன்மை உடையது. இப்படைப்புழுவின் தாக்குதல் பற்றி எனது கவனத்திற்கு வந்ததும், பயிர் பாதிப்பினை கணக்கெடுக்கும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினருக்கு உடனடியாக நான் உத்தரவிட்டேன். பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேளாண்மைத் துறைக்கு நான் உத்தரவிட்டேன்.
அது மட்டுமன்றி, மாநில பேரிடர் நிவாரண நிதியின் வரையறைகளின்படி இம்மாதிரியான பாதிப்புகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வழிவகை இல்லாத காரணத்தால், இந்த வகையான பயிர் பாதிப்பினையும் வரையறைகளில் சேர்த்து, நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டேன். உரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இப்படைப்புழு கடந்த ஆண்டு முதன்முதலாக தாக்கியதால் சாகுபடி செய்யப்பட்ட 3.55 லட்சம் ஹெக்டேரில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 986 எக்டர் பாதிப்படைந்தது.
வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினர் துரிதமாக கணக்கெடுத்ததன் அடிப்படையில், மக்காச்சோளத்தைப் பயிரிட்டு அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 93 ஆயிரத்து 424 விவசாயிகளின் துயர் துடைக்க மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் இறவைப் பயிருக்கு ஹெக்டேருக்கு 13,500 ரூபாயும் மானாவாரிப் பயிருக்கு ஹெக்டேருக்கு 7,410 ரூபாயும் என்ற விகிதத்தில், மொத்தம் 186 கோடியே 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இப்புழு தாக்குதலைத் தடுக்க, கோடை உழவு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கவும், விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இப்படைப்புழு தாக்குதலில் இருந்து பயிர்களைக் காத்து விவசாயிகளின் நலன் காக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு என்றென்றும் விவசாயிகளின் துயர் துடைக்கும் அரசாகவே விளங்கி வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை மக்காச்சோளம் பயிரினை சாகுபடி செய்து இப்புழுவின் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இது தவிர, ஏற்கனவே பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து இப்புழுவினால் பாதிப்படைந்த மக்காச்சோள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினையும் பெற்றுத் தர வேளாண்மைத் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இது வரை சேராத வேளாண் பெருமக்களும், எதிர்வரும் காலத்தில் இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொருளாதார ரீதியாக தங்களை பாதுகாத்துக் கொள்ள உடனடியாக இத்திட்டத்தில் சேர வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 12 hours ago |
ஆனியன்ப்ரை4 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
கனமழை: கர்நாடக மாநிலத்தில் 23 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
12 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது.