முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் அரசியல் குழப்பம்: தேவகவுடாவுடன் அமைச்சர் சிவகுமார் சந்தித்து பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவை காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான சிவகுமார் நேற்று சந்தித்தார்.

கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கட்சிகளைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் நேற்று ராஜினாமா செய்தனர். இதனால் முதல் மந்திரி குமாரசாமி தலைமையிலான அரசு எந்த நேரத்திலும் கவிழும் நிலை உள்ளது. ராஜினாமா செய்த எம் எல் ஏக்கள் அங்கிருந்து மும்பை சென்று அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இதற்கிடையே, கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பாஜக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் குற்றம் சாட்டினர். இந்நிலையில், பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவை காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான சிவகுமார் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக அரசியல் நிகழ்வுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். அவருடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து