முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்நிலைகள் மாசுபடுவதை தவிர்க்க ரூ.2,371 கோடியில் கூவம் உள்ளிட்ட ஆறுகளை சீரமைக்க அரசு திட்டம்: 110- விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வியாழக்கிழமை, 11 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

நீர்நிலைகள் மாசுபடுவதை தவிர்க்க அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட சென்னை நதிகளை ரூ. 2,371 கோடியில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சட்டசபை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் அடையாறு மற்றும் கூவம் நதிகளுக்கான சுற்றுச்சுழல் சீரமைப்புத் திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் இதனை சேர்ந்த பிரதான நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை இடைமறித்தல், மாற்று வழிகளை அமைத்தல், இடத்திற்கு ஏற்ப ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைத்தல் மற்றும் தற்பொழுதுள்ள சென்னை கழிவுநீர் உட்கட்டமைப்புகளை புதுப்பித்தல், வலுப்படுத்துதல் போன்ற பணிகளை செயல்படுத்த, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்தும் இத்திட்டத்திற்கு சுமார் 2,371 கோடி ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டு, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விரைவான நகரமயமாதல், தொழில் மயமாக்கல் போன்ற காரணங்களால், தமிழ்நாட்டில் குடிநீர் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும். அதே வேளையில், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் தொடர்ச்சியாக பருவமழை பொய்த்து, நீர்வளம் குறைந்து வருகிறது. இந்த நிலையை சிறப்பாக எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல், நீர்நிலைகள் மாசுபடுவதை தவிர்ப்பது, தொழிற்சாலை மற்றும் இதர பயன்பாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை உபயோகிப்பது, கழிவு நீர் மறு உபயோகக் குழாய் கட்டமைப்பை தெரிவு செய்வது உள்ளிட்ட வழிமுறைகளைக் கொண்ட ஒருங்கிணைந்த கொள்கையை அம்மாவின் அரசு உருவாக்கும்.

கழிவுநீரை சுத்திகரித்துமறுபயன்பாடு

‘‘அம்மாவின் தொலைநோக்கு திட்டம் 2023″–ல், கழிவுநீரினை சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சி செய்வது ஒரு அங்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கிடவும், நீர் வழங்கல் ஆதாரங்களை அதிகரிப்பதற்கு நிரந்தர மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிவதற்கும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், 260 மில்லியன் லிட்டர் கழிவுநீரை மூன்றாம் நிலை சுத்திகரிப்பின் மூலம் சுத்திகரித்து, மறுபயன்பாட்டிற்காக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் விடுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.  அதே போன்று, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி மாநகராட்சிகளில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரினை மறு சுழற்சி செய்து தொழிற்சாலைகள் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு உபயோகிக்கும் சாத்தியக் கூறுகளைக் கண்டறிய, உரிய ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

வெள்ளலூரில் நவீனபேருந்து நிலையம்

கோயம்புத்தூர் மாநகராட்சி, தமிழ்நாட்டில் 2–வது பெரிய மாநகராட்சியாகும். இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, அம்மா, கோயம்புத்தூரில் ஒரு ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், வெள்ளலூரில் 61.62 ஏக்கர் பரப்பளவில், 178.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு மானியம் மற்றும் உள்கட்டமைப்பு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்று நடப்பு நிதியாண்டில் இப்பேருந்து நிலையம் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து