முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் ரணில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

இலங்கை அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறி விட்ட இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. தீர்மானத்தையொட்டி இரண்டு நாட்கள் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக முன்னாள் அதிபர் ராஜபக்சே தலைமையிலான எதிர்க்கட்சி தெரிவித்தது. இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தீர்மானத்தை ஆதரித்தும், எதிர்த்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் அரசுக்கு ஆதரவாக 119 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதனால் பிரதமர் ரணில்  அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து