முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பார்லி.யில் ஜெய்சங்கர் விளக்கம்

திங்கட்கிழமை, 9 மார்ச் 2026      இந்தியா
Jaishankar 2023 02 10

புதுடெல்லி, ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர் விவகாரத்தில், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே சரியான தீர்வைத் தரும் என்று பாராளுமன்றத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த பிப். 28-ம் தேதி தாக்குதலைத் தொடங்கிய நிலையில், இரு நாடுகளுக்கு எதிராக ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடும் ஏற்றத்தை சந்தித்து வருகிறது. 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு ஆசியாவின் புவிசார் நிலைமை காரணமாக இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு மிகப் பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து விதி எண் 176-ன் கீழ் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எனினும், இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் தனது உரையில் கூறியதாவது: மேற்கு ஆசியாவின் நிலை குறித்த இந்தியாவின் கவலையை வெளிப்படுத்தும் விதமாக அரசு சார்பில் ஏற்கெனவே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தி இருக்கிறோம். 

பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜிய ரீதியிலான அணுகுமுறை மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டு வரும் நிலைமைகளை பிரதமர் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார். சரியான விதத்தில் பதிலளிக்க ஏதுவாக அனைத்து சம்பந்தப்பட்ட துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த தொடர்ச்சியான மோதல் இந்தியாவுக்கு மிகவும் கவலை அளிக்கிறது. நாம் ஓர் அண்டை நாடு. மேற்கு ஆசியாவில் ஸ்திரத்தன்மை நீடிப்பதில் நமக்கு வெளிப்படையான பங்கு இருக்கிறது.

வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். ஈரானிலும் படிப்பு மற்றும் வேலை தொடர்பாக சில ஆயிரம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். இந்தப் பகுதி நமது எரிசக்திப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியம். இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கும் பல நிறுவனங்கள் இங்கு உள்ளன. விநியோகச் சங்கிலி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும், ஸ்திரத்தன்மை இல்லாத சூழலும் மிகவும் முக்கியப் பிரச்சினைகள். 

இந்த மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை கணிசமாக மோசமடைந்துள்ளது. இது மற்ற நாடுகளுக்கும் பரவி, அழிவை அதிகரிக்கிறது. இயல்பு வாழ்க்கையும் செயல்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மோதல் காரணமாக நாம் இரண்டு கப்பல் பணியாளர்களை இழந்துவிட்டோம். ஒருவரை காணவில்லை.

தெஹ்ரானில் உள்ள பல இந்திய மாணவர்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்வதற்கு இந்திய தூதரகம் வசதி செய்துள்ளது. ஈரானில் உள்ள இந்தியர்கள் அர்மீனியா வழியாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. தெஹ்ரானில் உள்ள நமது தூதரகம் முழுமையாக செயல்பட்டு வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் அங்குள்ள இந்திய சமூகத்துக்கு ஆதரவாக இருப்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து