முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குல்பூஷன் வழக்கு பாக்.கிற்கு வெற்றியா? மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கிண்டல்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பாட்னா : குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி என்று அந்நாடு கூறுவதை மத்திய அமைச்சர் கிண்டல் செய்துள்ளார்.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ். தங்களது நாட்டில் உளவு பார்த்தார் என அவர் மீது குற்றம் சாட்டி பாகிஸ்தான் ராணுவ கோர்ட் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதை தொடர்ந்து இந்தியா சர்வதேச கோர்ட்டை நாடியது. தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையை அடுத்து சர்வதேச கோர்ட்டு நீதிபதிகள், குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்து நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜாதவை விடுவிக்க கூறாத சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று உள்ளார். இந்த தீர்ப்பு பாகிஸ்தானிற்கு கிடைத்த வெற்றி என்று அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. மேலும் அந்த பதிவில் “ இது பாகிஸ்தானிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. குல்புஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும். அவர் நாடு திரும்புவதற்கு உத்தரவிட என்ற இந்தியாவின் கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்து விட்டது என்று குறிப்பிட்டிருந்தது. இதேபோல் அந்நாட்டின் ஊடகங்களும் இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்ற ரீதியிலே செய்திகள் வெளியிட்டன.

இந்நிலையில், பீகார் எம்.பியும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் பாகிஸ்தானிற்கு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆங்கிலத்தில் உள்ளதால் தான், பாகிஸ்தான் தாங்கள் வெற்றி பெற்றுள்ளதாக நினைத்து கொண்டுள்ளதாகவும், அது அவர்களின் தவறில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து